Search This Blog

Pages

Tuesday, February 26, 2013

தீவிரவாத வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவ, சிறையில் இருந்து விடுதலையானவர் அமைப்பை துவக்கினார்!


asdd
தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் பொய் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார்.
2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை(ஏ.டி.எஸ்) கைது செய்த யுனானி மருத்துவரான சல்மான் ஃபார்ஸி இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஏ.டி.எஸ் சல்மானை கைது செய்தது. பாகிஸ்தானில் இருந்து வந்த போராளிகளுக்கு உதவினார் என்றும், ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை கடத்தியதாகவும் இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால்,தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளது வெட்டவெளிச்சமானதை தொடர்ந்து ஐந்து வருட கொடுமையான சிறைக்கு பிறகு 2011-ஆம் ஆண்டு சல்மான் உள்ளிட்ட அப்பாவி இளைஞர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
ஒரு வருடமாக யுனானி ப்ராக்டீஸ் நடத்திய பணத்தைக் கொண்டு ஜஸ்டிஸ் லீகல் வாய்ஸ் என்ற அமைப்பை சல்மான் துவக்கியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக தீவிரவாத வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனக்கு சட்டத்தைக் குறித்து எதுவும் தெரியாது என்று சல்மான் கூறுகிறார். இதுபோல பல்வேறு சம்பவங்களை தன்னை சுற்றிலும் கண்ட சல்மான் சட்டத்தைக் குறித்து படிக்கத் துவங்கினார். அப்பகுதியில் பல்வேறு வழக்கறிஞர்களின் உதவியையும் இவ்வமைப்புக்காக அவர் உறுதிச் செய்துள்ளார்.
பொய் வழக்குகளில் சிக்கும் அனைத்து சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கும் உதவி அளிப்போம் என்று சல்மான் கூறுகிறார். தற்போது தனது யுனானி க்ளீனிக்கிலேயே இவ்வமைப்பின் அலுவலகத்தையும் அமைத்துள்ளார் அவர்.
சிறைகளில் உள்ள சூழல்களைக் குறித்து எந்த அமைப்பும் கவனத்தில் கொள்ளவில்லை என்று சல்மான் கூறுகிறார். சிறை கையேட்டில் கூறப்பட்டுள்ள காரியங்கள் கூட அங்கு நடப்பதில்லை.அதிலும் குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டவர் நிரபராதியாக இருக்கும்போது சூழல் பயங்கரமாகும். தன்னை இவ்வழக்கில் இருந்து முற்றிலும் விடுவித்த பிறகு தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சல்மான் தெரிவித்தார்.
ஏ.டி.எஸ் கைது செய்த பிறகு சல்மானும், இதர எட்டுபேரும் ஐந்து ஆண்டுகள் மும்பையில் பிரபல ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

செவ்வாயில் உயிரினங்கள் உண்டா?


Planet Mars
செவ்வாய்க் கிரகத்தின் நிலத்துக்கு அடியில் கிடைத்திருக்கும் தாது பொருட்களை தீவிரமாக ஆய்வு செத போது செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின் உதவியுடன் நடத்திய ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
கிரகங்களை விண்கற்கள் மோதும்போது நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் அழுத்தத்தின் காரணமாக மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன. செவ்வாய்க் கிரகத்தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும்போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் நிலத்துக்குள்ளே நுண்ணியிர்கள் வாழ்ந்துள்ளது உறுதிசெய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மஹாவம்சத்தின் புதிய பதிப்பில் சரத் பொன்சேகாவின் பெயர்


sarath-fonseka-2009-12-13-6-40-0
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் மஹா வம்சத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்று நூலாகக் கருதப்படும் மஹாவம்சத்தின் ஆறாம் பதிப்பில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
1978ம் ஆண்டு முதல் 2010ம்; ஆண்டு வரையிலான காலப் பகுதியில இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகள் இந்த ஆறாம் பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய பதிப்பில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் இவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளதாக மஹாவம்ச நூல் பதிப்புக் குழுவின் பொறுப்பாளர் சோபித தேரர் தெரிவித்தள்ளார்.
125 எழுத்தாளர்கள் இந்த நூலை எழுதுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலின் உள்ளடக்கங்கள் பாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உலக சனத்தொகையில் ஒரு வீதமானவா்கள் நினைத்தால் வறுமையை ஒழிக்க முடியும்


poverty can be stop
BBC: உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் மோசமான வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் மோசமான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒன்றேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது.
ஒரு சிலர் கைகளிலேயே எல்லா பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று அடுத்த வாரம் சுவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந்த சந்திப்பு ஒன்றில் ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.
உலகின் ஏற்றத்தாழ்வை ஒழிக்க உலகத் தலைவர்கள் ஸ்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
அளவுக்கு அதிகமான செல்வம் என்பது, ”பொருளாதார ரீதியான செயற்திறன் இன்மையையும் சமூக ரீதியான பிளவையும் காட்டுகிறது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
அனைத்து மனித சமூகத்தின் நலனுக்காக உலக பொருளாதார முறைமையில் மாற்றம் வரவேண்டும் என்று அது கூறியுள்ளது.
உலக சனத்தொகையில் ஒரு வீதமான செல்வந்தர்கள் கடந்த 20 வருடங்களில் தமது வருமானத்தை 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.
உலக வரி முறைமைகளில் மாற்றம் செய்யப்படுவதுடன், இலவசமான பொதுச் சேவைகளிலும் சுகவீனமுற்றவர்கள் மற்றும் வேலையற்றவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் ஒக்ஸ்பாம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உலக நாடுகளின் தலைவர்கள் தமது மட்டத்தில் முதலில் ஏற்றத்தாழ்வை சரி செய்ய வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு, பலவீனமான வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஒக்ஸ்பாம் வலியுறுத்தியுள்ளது.
உலக பொருளாதார முறைமையில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது என்று ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் தலைமை இயக்குனரான பார்பரா ஸ்டோக்கிங் கூறியுள்ளார்.

வாழ்க்கை நெறி… வாழவைக்கும் நெறி…


islam
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி என்பதன் தத்துவத்தை நாம் இவ்வாறு விளக்குவதனால் இஸ்லாத்தின் மகிமை பறைசாற்றப்படுகிறது. அதேவேளை இஸ்லாத்தைப் பிழையாகப் புரிந்தவர் அதனை சரியாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பும் ஏற்படுகிறது. எனினும் இந்த விளக்கத்தால் இஸ்லாம் நிலைநாட்டப்பட்டு விடுவதில்லை.
‘இஸ்லாம் ஒரு வணக்க நெறி’ என்பதை விட ‘வாழ்க்கை நெறி’ என்ற புரிதல் முஸ்லிம் சமூகத்திடம் இருப்பது அவசியமே. எனினும் அது ஒரு தத்துவார்த்த விளக்கம் என்பதை நாம் உணர்ந்திருத்தல் வேண்டும்.
இந்தத் தத்துவார்த்த விளக்கம் மனிதர்களில் சிலரைக் கவரவே செய்யும். அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்துகின்ற ஆற்றல் அதற்குண்டு என்பதை யும் நாம் மறுக்க முடியாது. எந்தவொரு விடயத்தையும் உள்வாங்கி சிந்தித்து ஆராய்ந்து முடிவு செய்பவர்களிடம் இந்த விளக்கம் தாக்கம் செலுத்துகின்றது. அந்தகையவர்கள் முஸ்லிம்களாக இருப்பினும் சரி முஸ்லிமல்லாதவர்களாக இருப்பினும் சரி இஸ்லாம் பற்றிய அறிவுபூர்வமான விளக்கங்கள் அவர்களைக் கவர்கின்றன. இஸ்லாத்தை நேசிக்கவும் அதனை விசுவாசிக்கவும் அதிலே ஆழமாகத் தடம்பதிக்கவும் இந்த விளக்கம் அவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.
அது மட்டுமல்ல சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களுக்கும் இஸ்லாம் பற்றிய இந்தப் புரிதலும் விளக்கமும் இன்றியமையாததாகும். இந்தப் புரிதலும் விளக்கமும் இல்லாமல் இஸ்லாம் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையோடு அவர்கள் சமூகத்தை வழிநடத்த முற்படுவார்களாயின் பிழையான திசைகளிலேயே அவர்கள் சமூகத்தை வழிநடத்துவார்கள். ஆலிம்கள் தாஇகள் என்போரும் கூட இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி என்ற கோட்பாட்டைத் தெளிவாக விளங்கியிருத்தல் வேண்டும். இஸ்லாத்தை ஒரு வணக்க நெறியாக (வணக்கம் பற்றிய குறுகிய பார்வையில்) அவர்கள் விளங்கிக் கொள்வார்களாயின் அப்போதும் சமூகம் குழப்பத்தில் ஆழ்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.
தத்துவார்த்த ரீதியாக இஸ்லாம் பற்றிய சரியான புரிதலும் விளக்கமும் எவ்வளவுதான் முன்வைக்கப்பட்டாலும் அது அனைவரையும் கவருவதில்லை. தனி மனிதர்கள் சிலரை சரியான திசையில் அந்த விளக்கம் வழிநடத்தினாலும் சமூகம் அதன் வழமையான திசையிலேயே ஓடிக் கொண்டிருக்கும். தஃவா களத்தில் இருப்பவர்கள் இந்த உண்மையையும் உணர்ந்திருத்தல் வேண்டும்.
அவ்வாறாயின் ‘இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி’ என்பதற்கப்பால் சிந்திக்க வேண்டிய மற்றுமொன்றும் இருக்கிறதா எனும் வினா எழுகிறது.
ஆம் நிச்சயம் இருக்கிறது. இஸ்லாத்தை ஒரு வாழ்க்கை நெறி என்ற அந்தஸ்திலிருந்து ‘வாழ வைக்கும் நெறி’ எனும் தரத்திற்கு நாம் அதனை உயர்த்த வேண்டும். அப்போதுதான் சமூக மாற்றம் தளிர் விடத் துவங்குகிறது.
வாழ வைக்கும் நெறி என்றால் என்ன?
ஏற்கனவே ‘வாழ்க்கை நெறி’ என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தோம். ‘வாழ வைக்கும் நெறி’ என்பது அதனைவிட வேறுபட்டதாகும்.
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி என்பது பற்றித் தெரியுமோ தெரியாதோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். அவர்களது முதற் பிரச்சினை அவர்களது வாழ்க்கையாகும். அவர்களது வாழ்க்கை சோதனைகளும் போராட்டங்களும் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. வாழ்க்கைச் சுமைகள் பல்வேறு வடிவங்களில் அவர்களை அழுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்… தாஇகள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகப் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களோ அவர்களை வாழவைக்கும் நெறியொன்றை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
‘வாழவைக்கும் நெறி’ என்பது அவர்களை உலகிலும் வாழவைத்து மறுமையிலும் அவர்களை வாழவைக்கும் நெறியாகும். அதாவதுஇ அவர்களது மறுமைப் பிரச்சினைகளையும் தீர்த்து உலகப் பிரச்சினைகளையும் தீர்க்கும் நெறியாகும்.
மக்கள் இஸ்லாத்தை செவிமடுக்கும்போது அவர்களுக்கு இந்த உண்மை விளங்க வேண்டும். அதாவது உலகிலும் மறுமையிலும் தங்களது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து தங்களை வாழவைக்கும் நெறி யொன்றின்பால் நாம் அழைக்கப்படுகிறோம் என்பது அவர்களுக்கு விளங்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்கள் இஸ்லாத்தின்பால் வருவார்கள். தங்களது இம்மைப் பிரச்சினைகளை அலட்டிக் கொள்ளாமல் மறுமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறும் ஒரு நெறியின்பால் அவர்கள் அழைக்கப்பட்டால் அதிகமானவர்கள் அக்கறையோடு அதனை நோக்க மாட்டார்கள்.
குர்ஆனும் வாழ்க்கை நெறியின் பக்கம் வாருங்கள் என்று கூறாமல் வாழ வைக்கும் நெறியின்பால்தான் அழைப்பு விடுகிறது. எட்டாம் அத்தியாயம் 24வது வசனம் ஈமான் கொண்டவர்களை நோக்கி பின்வருமாறு அழைப்பு விடுக்கிறது:
‘ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களை வாழ வைக்கும் ஒன்றின்பால் அழைத்தால் அவ்வழைப்புக்குப் பதில் கூறுங்கள்’.
இந்த வசனத்தின் ஆழமான பொருளை விளங்கிக் கொள்ள இறுதித் தூதர் அனுப்பப்பட்ட அரபு சமூகத்தின் அன்றைய நிலையை நாம் ஒருமுறை மீட்டிப் பார்க்க வேண்டும்.
அது ஒரு பாலைவனம். இயற்கை வளங்கள் எதுவும் அங்கில்லை. அங்கு வாழ்ந்த மக்கள் உயர்ந்தவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் வேறுபடுத்தப்பட்டிருந்தார்கள். ஒரு புறத்தில் வறுமை மற்றொரு புறத்தில் அறியாமை. இவற்றோடு அடிமைத்துவம் அநீதி என்பவற்றின் அரசாட்சி ஒழுக்க வீழ்ச்சி பொருளாதார சீர்கேடுகள் என்பன அங்கு தாராளம். பசி பிணிகளால் வாழும் மக்களை அரவணைக்க அங்கு எந்த ஏற்பாடும் இல்லை. குலப் பெருமையும் வரட்டு கௌரவங்களும் அவர்களை சின்னாபின்னப்படுத்தி இரத்தம் சிந்தும் போர்க்குணம் கொண்டவர்களாக அவர்களை மாற்றியிருந்தன.
இந்நிலையில் அம்மக்களை அல்லாஹ்வின் தூதர் வாழவைக்கும் நெறியொன்றின்பால் அழைக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? இந்தளவு பிரச்சினைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு அவர்கள் மக்களை மறுமையின் வெற்றி நோக்கி மட்டும் அழைக்கவில்லை அல்லது இவை அனைத்தும் அழிந்து போகும் அற்பமான உலகின் சோதனைகள் ஈமான் கொண்டவர்கள் இவற்றை சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொள்ளவுமில்லை. அல்லது மனிதர்கள் ஈமான் கொண்டு தொழுது நோன்பு நோற்றால் மட்டும் போதும். அல்லாஹ் இவற்றைத் தானாக மாற்றித் தருவான் என்று கூறவுமில்லை.
வாழ வைக்கும் நெறியின்பால் அவர்கள் விடுத்த அழைப்பு இதுவல்ல. அவர்கள் அனைவரையும் அழைத்தது உலக மறுமைப் பிரச்சினைகள் அனைத்தையும் வெற்றி கொள்ளும் ஒரு கொள்கையின்பாலாகும். நபியவர்கள் கூறினார்கள்.
‘லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள்.’ வெற்றி பெறுவீர்கள்.
அண்ணலார் அழைப்பு விடுத்த அந்த வெற்றி பொதுவானது. அது உலகத்தில் பிரச்சினைகளை வெற்றி கொண்டு மறுமையின் பிரச்சினைகளையும் வெற்றி கொள்வதற்கான அழைப்பாகும். ‘லா இலாஹ இல்லல் லாஹ்’வின் பொருளை அறிந்தவர்கள் அதில் பொதிந்திருக்கும் வெற்றியின் இரகசியத்தை உணர்வார்கள். ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வின் பொருளை இங்கு தத்து வார்த்தமாக விளக்குவதை விட அந்தக் கொள்கையை நிலைநாட்டிய நபிகளாரின் வரலாற்றை ஒரு முறை மேலோட்டமாக மீட்டிப் பார்த்தாலே போதுமானது. அவர்களது வரலாறு உலக மறுமைப் பிரச்சினைகளை வெற்றி கொண்ட வரலாறாக அன்றி வேறெதுவாக இருக்க முடியும்?
கொலைவெறி தாண்டவமாடிய அன்றைய அரபுச் சூழலில் ‘சன்ஆவிலிருந்து ஹழ்ரமௌத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சங்களின்றி இரவு பகலாகத் தனியே பயணிப்பாள்’ என்று கூறுமளவு பிரச்சினைகளைத் தீர்த்த ஒரு நபியைத்தான் நாம் வரலாற்றில் காணுகிறோம். அது மட்டுமா? ‘அரபு மண்ணில் நான் வணங்கப்படுவேன் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்து விட்டான்’ என்று கூறுமளவு பிரச்சினை களற்ற ஓர் அமைதித் தேசமாக அரபுத் தேசத்தை அண்ணலார் மாற்றியமைத்தார்கள்.
ஆக ‘வாழ வைக்கும் நெறி’ இஸ்லாம் என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிரூபித் துக் காட்டினார்கள். அந்த நிரூபணம் முன்னேற்றமடைந்த போதெல்லாம் மக்கள் இஸ்லாத்தை நோக்கி முன்பிருந்ததை விட அதிகமாக முன்னேறினார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உலகில் ஆற்ற இருக்கும் பணி பற்றி முன்கூட்டியே அல்லாஹ் அல்குர்ஆனில் பிரஸ்தாபித்திருந்தான். ஸூர துல் அஃராபின் 157வது வசனம் அண்ணலாரின் பணியை விவரிக்கிறது.
‘அவர்கள் நன்மையை ஏவுவார்கள் தீமையைத் தடுப்பார்கள். நல்லவற்றை ஹலாலாக்குவார்கள் தீயவற்றை ஹராமாக்குவார்கள். மக்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமைகளையும் அவர்கள் மீதிருக்கும் (அடிமைத்தள) விலங்குகளையும் அகற்றுவார்கள்…’
வாழவைக்கும் அண்ணலாரது பணியே இவ்வாறு அல்லாஹ்வால் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. நபிகளார் மட்டுமல்ல அவருக்கு முற்பட்ட கால நபிமார்களும்கூட மக்களை வாழவைக்கும் அழைப்பையே விடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்திலும் உலகின் எந்தப் பிரச்சினை அவர்களது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்குத் தடையாக இருந்ததோ அந்தப் பிரச்சினையிலிருந்து அந்த சமூகத்தை விடுவிப்பது அந்தந்த நபிமார்களின் பொறுப்பாக இருந்திருக்கிறது.
ஸூரதுஷ் ஷுஅராவைப் படித்துப் பாருங்கள். நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) பிர்அவ்னின் அடக்குமுறை ஆட்சியிலிருந்து பனூ இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்காக நடத்திய போராட்டம் நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மூட நம்பிக்கைகளிலிருந்து தனது சமூகத்தைப் பாதுகாக்க நடத்திய போராட்டம் நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற வர்க்க வேறுபாடுகளை அகற்றுவதற்காக நடத்திய போராட்டம் ஹூது ஸாலிஹ் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் சமூகத்தின் மேல் மட்டத்தையும் கீழ்மட்டத்தையும் பீடித்திருந்த ஆடம்பர மோகத்திற்கெதிராக நடத்திய போராட்டம் நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) பாதாளத்தை நோக்கி அந்த சமூகத்தைக் கொண்டு சென்ற பயங்கரமான ஒழுக்கச் சரிவுக்கெதிராக நடத்திய போராட்டம் நபி ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) பொருளாதார நடைமுறைகளில் காணப்பட்ட சீர்கேடுகளுக் கெதிராக நடத்திய போராட்டம்…
இவை அனைத்தும் உணர்த்துவது என்ன?
நபிமார்கள் அல்லாஹ்வின் பக்கமும் மறுமையின் பக்கமும் மக்களை அழைத்தார்கள். அதேவேளை உலகிலும் மக்களின் வாழ்க்கையை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அவலங்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களை வாழவைக்கும் போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள்.
இஸ்லாம் ‘வாழும் நெறி’ மடடுமல்ல அது உலகை ‘வாழவைக்கும் நெறி’ என்பதை ஒவ்வொரு நபியும் உலகில் நிரூபித்திருக்கிறார்கள். இதுதான் நபிமார்கள் உலகில் செய்த பணி.
ஆனால் இன்று இந்நிலை மாறுபட்டிருக்கிறது. இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகக் காட்டப்படுகிறது. ஒரு வணக்க நெறியாக சம்பிரதாய நெறியாகக் காட்டப் படுவதை விட இது சிறந்ததே. எனினும் வாழவைக்கும் நெறியாக அது மாற்றப்படவில்லை. அதனால் அவலங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அழைப்பும் பணிகளும் தொடருகின்றன.
இன்றைய அவலங்களை சிறிது நோக்குங்கள்.
சொகுசையும் கவர்ச்சியையும் இலக்காகக் கொண்ட வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம்.
சேவை மனப்பாங்கற்ற உத்தியோகம்.
ஒழுங்கும் கட்டுப்பாடும் கேள்விக்குறியாகும் நிர்வாகம்.
காதிக்கோட்டில் காத்துக் கிடக்கும் குடும்ப வாழ்வு.
நீதியும் அர்ப்பணமும் அற்ற தலைமைகள்.
பண்பாடு அறியாமல் வளரும் அடுத்த சந்ததி.
மேற்கத்தேய சிந்தனையில் குளிர் காயும் இளைஞர்இயுவதிகள்.
சொத்துப் பங்கீட்டைப் புறக்கணித்து சீதனத்தை சட்டமாக்கியுள்ள திருமணம்.
பாதாள உலகம் என்ற பெயரில் பலிக்கடாவாகும் அப்பாவித்தனம்.
விகிதாசாரத்தைத் தாண்டிச் செல்லும் குற்றச் செயல்.
இரத்தத்தை உறைய வைக்கும் ஒழுக்கச் சீர்கேடு.
வட்டியும் ஏமாற்றும் கட்டாயமாக்கப்பட்ட வியாபரம்.
ஆணையும் பெண்ணையும் தொற்றியிருக்கும் வெளிநாட்டு மோகம்…
இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு ‘இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி’என்று எவ்வளவு காலம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறிதான் சந்தேகமில்லை. எனினும் அது வாழவைக்கும் நெறியாக தன்னைத்தானே மாற்றிக் கொள்வதில் தாஇகளும் தஃவா அமைப்புகளும் தான் அதனை வாழ வைக்கும் நெறியாக மாற்ற வேண்டும். அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால் இஸ்லாத்தின் மகிமையை உலகம் நிச்சயம் புரிந்து கொள்ளும்.
jazakumullah - usthazhajjulakbar.org

அறிமுகமாகவிருக்கும் இ-பேப்பர் டேப்லெட் கம்ப்யூட்டர்


E-PAPER TOUCHSCREEN TABLET
டேப்லெட் கணினிகளின் தொழில்நுட்ப புரட்சியின் பயனாக E-PAPER TOUCHSCREEN TABLET விரைவில் அறிமுகமாக உள்ளது. 10.7 அங்குல அளவுடைய தொடுத் திரையுடன் காகிதம் போல நெகிழும் தன்மையுடையதாக காணப்படுகின்றது.
INTEL CORPORATION, PLASTOC LOGIC மற்றும் QUEEN’S UNIVERSITY ஆகியவை இணைந்து அறிமுகப்படுத்தும் இந்த இ-பேப்பர் டச்ஸ்கிரீன் டேப்லெட் கோர் i5 பிராசசரை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது நெகிழும் தன்மை மட்டுமல்லாமல் மற்ற திரையிலிருந்து நொடிப் பொழுதில் பைல்களை உள் வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டது. இது முழுவதும் ஆன்ராய்டு தளத்தில் இயங்கக்கூடியது.

office professional 2012

win7z

Task Force Quit Pro

Secret Notes

Memory Optimizer Pro

Folder Colorizer

AVG PC tuneup Pro 2013 12.0.4000.108

Monday, February 25, 2013

AVG PC Tuneup Pro 2013 12.0.4000.108 Portable


AVG PC Tuneup Pro 2013 12.0.4000.108 Portable

AVG PC Tuneup Pro 2013 12.0.4000.108 Portable | 55.4 MB

With AVG PC TuneUp Pro 2013 your operating system, games and software again reached full capacity. With AVG PC TuneUp you can perform important tasks such services as cleaning the hard drive and registry, either automatically or manually. Disorder in the system and slow work remain in the past. AVG PC TuneUp recognizes the existence of problems in your system and offers simple solutions to address them. In addition, with AVG PC TuneUp you can completely change the appearance of your Windows system to suit personal preferences. 
The new interface is running AVG PC TuneUp offers a centralized development of all the functions and capabilities of adjustment. The main area of ??the interface running AVG PC TuneUp is divided into five categories, which are open to you fast and grouped by subject access to the most important functions of AVG PC TuneUp.

Status and recommendations. In the category of state and recommendations you get an overview of the current state of your system and recommendations on how to improve. Right displays the protection status of your system.

Optimization of the system. Under "System Optimization" can disable or remove unwanted programs and clean up your system and data.
Freeing up disk space. In the category of "Freeing up disk space" can systematically remove unnecessary data from your system.
Troubleshooting. In the category of "Troubleshooting" you will find simple solutions to potential problems.
Setting up Windows. Configuring Windows category offers you many opportunities to set up your environment to suit your preferences.

Three modes to optimize your PC:
Saving mode. With "mode saves AVG" you can reduce your computer's power consumption by deactivating the screen, hardware components, or unnecessary features.
Standard mode. Standard mode is turned on, if you do not include either "save mode", or "Mode Turbo". Thus, it is a normal mode Windows.
Mode Turbo. With Turbo Mode, you can at any time to further increase the speed of your system and customize it to suit your preferences.

Optimization of the system: 
Deactivating programs
Deactivation Autorun
Removing Programs,
Live-configuration optimization
Cleaning the registry
Registry Defragmentation
Removing non-working shortcuts
Quick Start and shutdown
Defragment the hard drive

Freeing up disk space 
Clean up your hard drive
Find and delete large amounts of data
Secure data deletion

Troubleshooting
Fixing common problems
Checking the hard drive for errors
Recover deleted files
Display and completion of ongoing processes
Displays information about the system

Configuring Windows
Customizing options and environment
Configure separate settings for Windows