Search This Blog

Pages

Wednesday, October 31, 2012

i Pad தயாரிக்கும் முறை


geeks-r-us-apple-ipad
சீனாவின் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் தயாரிப்பான ஐபாட் உருவாக்கப்படும் விதத்தை காட்டுகின்றது.
மேலும் சுலபமாக யாரும் உள்ளே சென்று விட முடியாத இத்தொழிற்சாலையில் உள்ளே நுழைந்து இந்த வீடியோ காட்சிகளை வெளிக் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகின்றது.

அணு ஆயுத திட்டம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தையா? மறுக்கும் அமெரிக்கா!


iran
ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக கூறி பல கெடுபிடிகளை விதித்து வருகிறது அமெரிக்கா. ஆனால் எதற்கும் சலைக்காமல் தனது பணியை தொடர்கின்றது. இதற்கிடையே அணு ஆயுத திட்டம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது குரிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும், ஈரானும் கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் தொடங்கிய போது முதலில் நடத்தப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரை பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தரப்பும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் நகல்கள், அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய சிறிய குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளதுடன், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் டாமி வீட்டர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையல்ல.
எனினும் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா நிர்வாகம் தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கண்ணைக் கவரும் கலர் உணவுகளில் கவனம் தேவை


900
சிறிய மிட்டாய் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் வரை கண்ணைக் கவரும் கலராய் இருந்தால் தான் கவனம் ஈர்க்கிறது.
அந்த நிறத்தின் அழகில் மயங்கி அதை வாங்கி உட்கொள்பவருக்கு உடல்ரீதியான குடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இந்த ரசாயனங்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும் பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.
இவைகளை தொடர்ந்து நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால் உயிருக்கே பேராபத்தாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ரசாயனங்களினால் ஆஸ்துமா, சோரியாசிஸ், தோல் அலற்சி, நரம்பு மண்டலம் பாதிப்பு, குடல்புண், குடல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, வயிற்றுவலி, சைனஸ், சிறுநீரக கட்டி, ரத்தக்குழாய் சுருங்குதல், வாந்திபேதி, மூளையில் கட்டி, ரத்த அழுத்தம், குறை பிரசவம், ஆட்டிசம், குறைபாடான குழந்தை பேறு போன்ற நோய்கள் உண்டாகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மீன் வறுவல்கள் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்தும் சிவப்பு நிறத்தில் தருகின்றனர். இந்த சிவப்பு நிறத்துக்காக அளவுக்கதிகமாக கேசரி பவுடர் சேர்க்கப்படுகிறது. சில இடங்களில் பஜ்ஜி, போண்டாவிலும் சேர்த்து நிறம் உண்டாக்கப்படுகிறது.
இப்படி ரசாயனம் சேர்க்கப்பட்ட சிக்கன் 65, மீன் வறுவல் சாப்பிடுவது பணம் கொடுத்து நாமே நோயை வாங்குவதாகும். இவைகளை சாப்பிட்டால் குடல் கேன்சர், சோரியாசிஸ் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நாளடைவில் உயிருக்கும் வேட்டு வைத்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கேக்குகளின் கிரீம்களில் உள்ள ரசாயனங்கள் பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
கர்ப்ப காலத்தில் பெண்கள் குளிர்பானங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது மகப்போறு மருத்துவர்களின் அறிவுரையாகும்.
ஏனெனில் கர்ப்ப காலத்தில் குளிர்பானங்களை குடிப்பதால் அதில் உள்ள ரசாயனங்கள் கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கின்றன. இதனால் பிறக்கும் குழந்தை, ஆட்டிசம் மற்றும் மளவளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே கண்ணைக் கவரும் நிறங்கள் கொண்டு உணவுகள் மீதான கவனத்தை குறைந்து இயற்கையான உணவுகளை உண்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.

நாம் பயன்படுத்தும் மொபைல் 2014-ல் இப்படித்தான் இருக்குமாம்..!


999

அமெரிக்க ஜனாதிபதிகள் ஏராளமான அப்பாவிகளை கொல்கின்றனர்: காலித் ஷேக் விவாதம்


khalid-sheikh
அமெரிக்காவில் நடந்த செப்டம்பர்  11 தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததாகவும் குவைத்தில் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்தவரான காலித் ஷேக் முகம்மது கைது செய்யப்பட்டார்.
தற்போது கியூபாவின் குவாண்டனாமோவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் 3வது நாளாக இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது காலித் ஷேக் முகம்மது தனது விவாதத்தை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதிகள் ஏராளமான அப்பாவிகளையும், சிறுவர்களையும், சிறுமிகளையும் படுகொலை செய்து வருகிறார்கள்.
மேலும் பலரை சொல்லில் வடிக்க முடியாத சித்ரவதைக்கு எல்லாம் ஆளாக்கி வருகிறார்கள். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஒருவர் கொல்லப்பட்டு கடலில் புதைக்கப்பட்டு விட்டார் (அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன்).
எல்லா ஆட்சியாளர்களும் தங்களுடைய நோக்கங்களை எல்லாம், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலில் 3,000 பேர் இறந்ததாக அமெரிக்க அரசு வருந்துகிறது. ஆனால் அவர்களால் நாங்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளோம். கடந்த 2002ஆம் ஆண்டில் அமெரிக்க பத்திரிகை நிருபர் டேனியலை இந்த புனிதமான கையால் தான் கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.
40 நிமிடங்கள் காலித் ஷேக் முகம்மதுக்காக ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் இவர் அரபு மொழியில் கூறியதை, மொழி பெயர்ப்பாளர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: பல்கலைக்கழக ஆணைக்குழு அங்கீகாரம்!


seu
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மைல்கல்லாக  பொறியியல் பீடம் அமைப்பதற்கான அங்கீகாரத்தினை பல்கலைக்கழக ஆணைக்குழு  வழங்கியுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மிக நீண்ட நாள் தேவைகளுள் ஒன்றாக காணப்பட்ட பொறியியல் பீடத்தினை அமைப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அந்த முயற்சி தற்போது வெற்றியளித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் பொறியியல் துறையில் கல்வி பயில்வதற்காக கொழும்பு மற்றும் பேரதெனிய பல்கலைக்கழகங்களுக்கே இதுவரையும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவ்வருடம் முதல் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களை சேர்ந்த  தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் இப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயிலும் சந்தர்ப்பத்தைப் பெறவுள்ளனர்.
இந்த வருடம் முதல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு்ள்ள பொறியியல் துறை மாணவர்களை முதற் தொகுதியாக கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகத்தில் செயற்படவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் துறையினை பெற்றுக் கொள்வதற்கு உதவிய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக ,தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கே.எம்.இஸ்ஹாக் மற்றும் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோருக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

2012 – லண்டன் ஒலிம்பிக் இறுதிநாள் நிகழ்வின் மர்மங்கள்


closing14-e1345129530561
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் ஆரம்பம் செய்கிறேன்.
ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வு பிரித்தானியாவின் கடந்த காலத்தை பிரதிபலிப்பதாக இருந்தது, ஆனால் இறுதிநாள் நிறைவு விழாவோ எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்டிருந்தது.

வணங்கப்படும் பிரமிட்
நிறைவு விழா
புகழப்படும் இலுமினாடிகள்.
NWO அல்லது New World Order அதாவது புதிய உலகுக்கான பிரகடனம்.இந்த பிரகடனத்தை ஏற்று அதன்படி இந்த உலகை தமது ஆயுத பலத்தால் வழிநடத்திச் செல்லும் மேற்குலகின் உயரடுக்கு மக்களின் ஒரே குறிக்கோள் முழு உலகமும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.ஒரே ஆட்சி முழு உலகையும் ஆள வேண்டும்.முழு உலகத்திலும் ஒரே நாணயம் பயன்படவேண்டும்.
இந்த குறிகோளுடன் இருப்பவர்களுக்கு தமது செய்தியை சொல்ல மிக பொருத்தமான இடங்களில் மிக முக்கியமான இடம்தான் ஒலிம்பிக்.இதை இவர்கள் சொன்ன விதம் மிகவும் மர்மமானது.எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் ஒரு மேடையை சுற்றி ஒன்று சேர்ந்தனர்.அப்போது நடனமாடியவ்ர்கள் மெது மெதுவாய் ஒரு பிரமிட்டை கட்டம் கட்டமாக கட்டி எழுப்பினர்.பின்னர் அவர்கள் தரையில் விழுந்து அந்த பிரமிட்டை வணங்கினர்.கடைசியில் மேடையில் கட்டி எழுப்பப்பட்ட பிரமிட்டை சுற்றி எல்லா நாட்டு வீரர்களும் தமது நாட்டுக் கொடியுடன் திரண்டிருந்தனர்.
இதன் நோக்கம் தான் என்ன ? இன்னும் புரியவில்லையா ?
voknews
vok
கட்டி எழுப்பப்படும் பிரமிட்டும் அதை சுற்றி காணப்படும் உலக நாட்டுக் கொடிகளும்
vok
கட்டி எழுப்பப்பட்ட பிரமிட்டும் அதை வணங்கும் நடனக்குளுவினரும்
Imagine – கற்பனை செய்துபார்
இறுதி விழாவின் இசை நிகழ்ச்சிகள் குறிப்பிட்டுக் கூறத்தக்க வரிகளைக்கொண்ட John Lennonஇனால் பாடப்பட்ட ” Imagine ” என்ற பாடலுடன் ஆரம்பமானது.இந்த பாடல் இப்படிப்பட்ட ஒரு உலக நிகழ்வொன்றின் போது பாவிக்கப்பட்டதின் உள்நோக்கம் என்ன ? அது அந்த பாடலின் வரிகளை கவனித்தாலே இலகுவாக புரிந்துவிடும்.
Imagine there’s no countries 
It isn’t hard to do
Nothing to kill or die for
And no religion too
Imagine all the people living life in peace
You, you may say
I’m a dreamer, but I’m not the only one
I hope some day you’ll join us
And the world will be as one
Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man
Imagine all the people sharing all the world
ஒலிம்பிக் போன்ற அகில உலக நிகழ்வொன்றின் போது இப்படிப்பட்ட பாடல் வரிகளைக் கொண்ட பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டதன் உள் நோக்கம் என்ன ?
அதுவும் Imagine No Countries – Imagine No Religion – Imagine No Possession போன்ற வரிகள் சொல்லவரும் செய்திதான் என்ன ?
இந்த உலகை ஒரே குடையின் கீழ் ஆள நினைக்கும் மேட்டுக் குடியினரின் நோக்கங்கள் மேலே உள்ள வரிகள் மூலம் அவர்கள் சொல்லியிருப்பது தெளிவாக தெரிகிறது.இந்த பாடலைப் பாடியவர்களின் நோக்கம் வேற ஒன்றாக இருக்கலாம், ஆனால் இதை இந்த இடத்தில் பாவித்தவர்களின் நோக்கம் நிச்சயம் வேற ஒன்றே.
பீனிக்ஸ் வழிபாடு.
பலவிதமான கலை நிகழ்வுகளுக்குப் பிறகு எல்லோரினதும் கவனம் ஒலிம்பிக் தீப்பந்தத்தின் மீதே இருந்தது, அது அனைக்கப்படுவதட்கு முன் அதிலிருந்து கிளம்பி மேலே எழுந்து வந்தது ஒரு பீனிக்ஸ் பறவை.தனது சாம்பலிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்துவருவதாக கூறப்படும் இந்த கற்பனைப் பறவை இரகசிய சமுதாயங்களின் மிக முக்கியமான புதிர் நிறைந்த ஒரு சின்னமாகும்.
பண்டைய இரகசிய சமுதாயங்கள் மூலம் உச்ச அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பறவையே இந்த பீனிக்ஸ் எனப்படும் கற்பனைப் பறவை,இது அவர்களின் ஒரு ரகசிய குறியீடாக பயன்பட்டது.
பீனிக்ஸ் பற்றி Manly P Hall எழுதிய Secret Teaching Of All Ages இப்படி கூறப்பட்டுள்ளது.
“The phoenix is the most celebrated of all the symbolic creatures fabricated by the ancient Mysteries for the purpose of concealing the great truths of esoteric philosophy. (…) Medieval Hermetists regarded the phoenix as a symbol of the accomplishment of alchemical transmutation, a process equivalent to human regeneration. The name phoenix was also given to one of the secret alchemical formula. (…) In the Mysteries it was customary to refer to initiates as phoenixes or men who had been born again, for just as physical birth gives man consciousness in the physical world, so the neophyte, after nine degrees in the womb of the Mysteries, was born into a consciousness of the Spiritual world. This is the mystery of initiation to which Christ referred when he said, “Except a man be born again, he cannot see the kingdom of God” (John iii. 3). The phoenix is a fitting symbol of this spiritual truth.”
பீனிக்ஸ் இன் வருகைக்குப் பிறகு அரங்கத்தில் ஒலித்த பாடல் இன்னும் ஆச்சரியத்துக்குரிய வரிகளையுடையது.
இந்த பதிவு மூலம் நான் தந்தது ஒரு அறிமுகம் மட்டுமே ஆனால் இந்த இறுதி நாள் நிகழ்வில் இடம்பெற்ற இன்னும் பல மர்ம விடயங்கள் இருக்கின்றன..அது பற்றி மிகத் தெளிவாக விளக்கும் ஒரு காணொளி ஒன்று YOUTUBE இல் கிடைத்தது.அதை கட்டாயம் பார்க்கவும்.
சியோனிச LOGO

மலாலாவின் மீதான தாக்குதலின் பிண்ணணியில் அமெரிக்கா


Untitledmalala
பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக குரல் கொடுத்த இளம் சமூக சேவகியும் மாணவியுமான மலாலா யூசுப்ஜய் தாலிபான்களால் தாக்கப்பட்டார். உயிருக்கு போராடும் அவ்விளம்பெண் தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக உலகெங்கும் தாலிபான்களுக்கு எதிராக கண்டனம் வலுத்து வரும் நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் ஹிஸ்புத் தஹ்ரீர் எனும் அமைப்பு இச்சம்பவத்தின் பின்னால் அமெரிக்காவின் பங்களிப்பு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
முஸ்லீம்களின் தூதர் முஹம்மது அவர்களை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்ததற்கு உலகெங்கும் குறிப்பாக பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வீதிகளில் போராடிய மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பியதோடு இனி அமெரிக்கா பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த கூடாது என்று கூறினர்.
இச்சூழலில் மீண்டும் எதிர்ப்பின்றி தாக்குதல் நடத்தவும் அமெரிக்காவுக்கு எதிரான சூழலை திசை திருப்பவும் அமெரிக்கா தன்னுடைய கூலி படை தீவிரவாதிகளான ரேமண்ட் டேவிஸ் வலைப்பின்னல் மூலம் மலாலா யூசுப்ஜய்யை கொல்ல முயன்றுள்ளது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளது.
மலாலா மீதான தாக்குதலுக்கு பிறகு அறிக்கை வெளியிட்ட அமெரிக்க உள்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் பாகிஸ்தானின் நகரங்களில் எழுந்துள்ள தாலிபான் எதிர்ப்பலை தம்முடைய தாலிபான் வேட்டையை எளிதாக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் சிறை கம்பிகளை உடைத்து 120 கைதிகள் தப்பி ஓட்டம்


libyan-jail
லிபியாவின் சிறையில் அடைத்து வைக்கப்ப்ட்டிருந்த 120 கைதிகள் சிறை கம்பிகளை உடைத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
லிபியா தலைநகர் திரிபோலியில் அல்-ஜுடைடா என்ற இடத்தில் மத்திய சிறை உள்ளது. இது லிபியாவில் உள்ள மிகப்பெரிய சிறை ஆகும்.
இங்கு பலதரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் காலெத் அல்-ஷரீப் தெரிவித்துள்ளார். தப்பி ஓடியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து இங்கு வந்து சட்ட விரோதமாக குடியேறியதால் கைது செய்யப்பட்டவர்கள்.
அவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவுவதால் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிறையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியும், சர்வாதிகாரியுமான மும்மர் கடாபி சிர்தே நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிடிபட்டு அடித்து கொல்லப்பட்டார்.
அந்த முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கைதிகள் தப்பி உள்ளனர். எனவே அவர்கள் கடாபியின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிறையிலிருந்து தப்பி ஓடும் சம்பவம் லிபியாவில் இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேனா மூடிகளில் மினி ரோபோ: கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை! (வீடியோ இணைப்பு)


zck-fayas
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 9 இல் பயில்கின்ற ஜே. எம். பயாஸ் என்கிற மாணவன் பயன்படுத்தப்பட்ட பேனா மூடிகளைப் பயன்படுத்தி மிகவும் அற்புதமான முறையில் மினி ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.
சிறிய இரு மின்கலங்களின் பயன்பாட்டால் நடத்தல், சுழலுதல் போன்ற செயற்பாடுகளை இந்த ரோபோவால் செய்ய முடிகின்றது.
இவரது கண்டுபிடிப்புகளுக்கு அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் பேராதரவும், பாராட்டும் வழங்கி வருகின்றனர்.

தொப்பையை குறைக்க சில டிப்ஸ்


fat-people
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது.
அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும்.
உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது.
அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் அழகான இடுப்பைப் பெறலாம்.
எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், வயிற்றை குறைத்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

Friday, October 26, 2012

PuppetShow: Lost Town Collector's Edition Final (Portable) | 555 MB


PuppetShow: Lost Town Collector's Edition Final (Portable)

PuppetShow: Lost Town Collector's Edition Final (Portable) | 555 MB
Year: 2011 | PC | ENG | Genre: Hidden Object | Developer: ERS G-studio | Publisher: Big Fish Games

After discovering a new system of caves, the entire town is excited to explore, until Suzy is kidnapped by a mechanical beast! Emerging from the darkness and startling the townfolk, the creature causes a cave-in behind him, leaving no trail to follow. Track the creature down and explore the mysterious caves in PuppetShow: Lost Town, a beautiful Hidden Object Puzzle Adventure game!

The Collector’s Edition includes:
*Bonus gameplay
*Gorgeous wallpapers
*Built-in Strategy Guide



Aztec Tribe New Land Final (Portable) | 101 MB


Aztec Tribe New Land Final (Portable)

Aztec Tribe New Land Final (Portable) | 101 MB
Year: 2011 | Language: English | PC | Published by: Alawar Entertainment | Genre: Build / Time Management Game

Start out with a grass hut and an apple grove; work your way up to a village with water wells, fisheries and logging facilities; and eventually build a thriving capital city with magnificent buildings, gold mines and warriors for protecting the people. Use your mouse to gather resources, build and upgrade buildings, and hire workers; and use your wits to form the best plan of action for each of the game’s 34 captivating levels. Packed with challenges, rewards and vibrant visuals, Aztec Tribe: New Land is a village builders dream come true!

Game Features:
* Two games modes
* 34 captivating levels
* 14 humorous characters
* 30 achievements
* Tutorial



Screenshots

Aztec Tribe New Land Final (Portable)

Aztec Tribe New Land Final (Portable)

Aztec Tribe New Land Final (Portable)


Download
==========

Download from Letitbit

Aladin and the Wonderful Lamp: The 1001 Nights Final (Portable) | 108 MB


Aladin and the Wonderful Lamp: The 1001 Nights Final (Portable)

Aladin and the Wonderful Lamp: The 1001 Nights Final (Portable) | 108 MB
Year: 2011 | PC | Language: English | Genre: Hidden Object | Developer: HdO Adventure

Aladin, a young orphan, lives in the Orient. His only wealth lies in his small house and an old ring, that formerly belonged to his father. As Aladin has to steal to survive, he wishes deep inside he will become a rich man, to be worth the Princess Jasmine's attention. A strange dark sorcerer seems to be willing to help him. But in the country of the Geniuses, Aladin will have to act carefully..



A THRILLING ADVENTURE:
Look for food, avoid the stallholders, find the marvels' cavern lost in the desert, enjoy the Genius' magic powers and find out what the mysterious secret kept in the Palace is!

USEFUL HINTS:
Use the Hint: a shiny halo helps you to find one of the objects.
No more hints? Not enough time? Find the bonus stars hidden in the scenes to get more hints or time!

MAGNIFICIENT SETS:
Escape in the oriental deserts, explore the souks, admire the marvels in the famous cavern or the prestigious Palace

- 40 places to observe
- Mini-games: puzzle games
- 3 profiles management
- 2 game modes: Classics and Time Attack
- Best scores on line
- Search of objects (list, to collect)
- Help: zoom on selected screens, limited number of reloading hints, bonus stars
- Magnificent sets: high resolution images

Screenshots

Aladin and the Wonderful Lamp: The 1001 Nights Final (Portable)

Aladin and the Wonderful Lamp: The 1001 Nights Final (Portable)


Download
==========

Download from Letitbit