Search This Blog

Pages

Thursday, May 26, 2011

இஸ்லாத்தின் தோற்றம்



அறபு மண்ணும் அதற்கப்பால் விரிந்து கிடக்கும் மணற்பரப்பும் ஒரு காலத்தில் மனித நாகரீகங்களின் தொட்டில்களாக இருந்துள்ளன. இஸ்லாத்துக்கு முன்னர் நிலவிய பபிலோனிய நாகரீகத் தடங்களும், செமித்தியமும், தென் அரேபிய, நபேத்திய நாகரீகங்களும் இப்ராஹிமியமும், ஹனிப் வாதமும் போன்ற பல்வேறு நாகரீக சமய பண்பாட்டு மரபுகள் எமது கவனத்தைக் கவர்வனவாகும். இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் இவை விபரிக்கப்பட்டுள்ளன. ஒரு தொன்மைச் சமூக வரலாற்றில் சமயத்தின் தோற்றப்பாடு எவ்வாறு நிகழ்கின்றது என்றும் சமய எழுச்சியைத் தூண்டிய காரணிகளின் இயல்பு என்ன என்பதும் பழங்குடிச் சமூக அமைப்புக்குள்ளிருந்து அரசயந்திரமும் புதிய சமூக ஒழுக்க வடிவங்களும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதும் இந்நூலின் மைய ஆய்வுப்பொருளாகும்.

No comments:

Post a Comment