Search This Blog

Pages

Wednesday, August 29, 2012

கல்முனைக்குடியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் 6 பேர் நிந்தவூர் அட்டப்பள வாகன விபத்தில் வபாத்தாகியுள்ளனர் (இன்னாலில்லாஹி வஇன்னா இளைகி றாஜிஊன்)


நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இன்று இரவு செவ்வாய்க்கிழமை  8.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனைக்குடியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் 6பேர் ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளனர் 

(இன்னாலில்லாஹி வஇன்னா இளைகி றாஜிஊன்)



இவர்கள் பயணம் செய்த ஆட்டோ வாகனம் மீது பின்னால் அதி வேகமாக வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று மோதியதன காரணமாகவே இவர்கள்வபாத்தாகியுள்ளனர் .

இவர்கள் கல்முனைக்குடி 13 புதிய வீதியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்களாவர்.  
ஒரே குடும்ப சகோதரிகளான எம்.எச்.ஜெமினா (வயது 40), எம்.எச்.இர்பானா (24), எம்.எச்.றிஹானா (34), இவரது புதல்வர்களான அக்தாஸ் அஹமட் (ஒன்னரை வயது), அம்ஹர் அஹமட் (இரண்டரை வயது,மற்றும் ஆட்டோ சாரதி எம்.இஸதீன் (50) ஆகியோரே வபாத்தானவர்களாவர்.

இவர்களது உடல்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பஸ் கொழும்பு செல்வதற்காக அக்கரைப்பற்றில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதற்கு முன்னாள் சென்ற ஆட்டோவை மோதி அடித்து, அதன் மேல் ஏறி சுக்கு நூறாக்கியுள்ளது. இதனால் குறித்த ஆட்டோ முற்றாக நசுங்கி தூலாகியுள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களும்  சேதமடைந்துள்ளது.


பஸ் சாரதி உரிய இடத்தில் பஸ்ஸை நிறுத்தாமல் பஸ்ஸுடன் கல்முனை பொலிஸ் வரை பயனித்து, கல்முனை பொலிசில் சரனடைந்துள்ளார். 








No comments:

Post a Comment