Search This Blog

Pages

Friday, March 1, 2013

தரக்குறைவான மருந்து இறக்குமதிக்கு எதிராக கடும் நடவடிக்கை : சுகாதார அமைச்சு


health ministry srilanka
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தரக்குறைவான மருந்து பொருட்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் அதன் அதிகாரிகளினை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்ற வாரம் அரசாங்க வைத்தியசாலை மருந்து போத்தல் ஒன்றினுள் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி மருந்துப் பொருள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
மேலும் மேற்படி தரக்குறைவான மருந்துப் பொருட்களினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் இறக்குமதி தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment