Search This Blog

Pages

Friday, September 20, 2013

1500 அடி ஆழ பள்ளத்தாக்கை கயிறு மூலம் கடந்து சாதனை

928804549g
அரிசோனா, ஜூன் 25- அமெரிக்காவில், 1,500 அடி ஆழம் உள்ள பள்ளத் தாக்கை கயிறு மூலம் கடந்து சாதனை படைத் துள்ளார், அந்நாட்டை சேர்ந்த வாலிபர்.
அமெரிக்காவின், அரி சோனா மாகாணத்தில் உள்ளது கிராண்ட் கேன் யான்’ பள்ளத்தாக்கு. 1,500 அடி ஆழ முடைய இந்த பள்ளத்தாக்கின் அருகில்தான், லிட்டில் கொலராடோ நதி பாய் கிறது. இந்நிலையில், இந்த பள்ளத்தாக்கின் ஒரு முனையிலிருந்து, மறு முனைக்கு, கயிறு மூலம் கடந்து சென்று, சாதனை படைத்துள்ளார், அந்நாட்டை சேர்ந்த வாலிபர், நிக் வாலண்டா, 34.
இது குறித்து நிக் வாலண்டா கூறுகையில், “எதிர்பார்த்ததை விட, காற்றின் வேகம் அதிக மாக இருந்தது. எனது தோள்பட்டையில் கடும் வலி இருந்த நிலையி லும், இந்த சாதனையை படைத்துள்ளேன்,” என்றார்.
இந்த மாபெரும் சாதனைக்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற வாலண்டா, கடை சியாக, புளோரிடாவில், கடும் பயிற்சி எடுத்து, 1,000 அடி தூரத்தை, கயிறு மூலம் கடந்தார்.
கடந்த ஆண்டு, உலகின் மிகப்பெரிய, நயாகரா’ நீர் வீழ்ச்சியை கயிறு மூலம் கடந்து சாதனை படைத்தார். தற்போது, 426 மீட்டர் நீளமுடைய இந்தப்பள்ளத்தாக்கை, இவர், 23 நிமிடத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment