Search This Blog

Pages

Friday, September 20, 2013

கல்முனை கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

kmc

(ஹாசிப் யாஸீன்)
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில்நிர்மாணிக்கப்பட்டு வரும் கிறீன் பீல்ட் பூங்காவிற்கான வீதி அபிவிருத்தி வேலைகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்தார்.
கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கு முன்னால் செல்லும் குளத்தினை சுத்தப்படுத்தி அதனை மக்கள் பொழுது போக்கு இடமாக பயன்படுத்தக் கூடியவாறு இவ்வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது இவ்வீதி அபிவிருத்தி வேலைகளுக்கு தடையாகவிருந்த தனியார் கட்டிடங்கள் அகற்றப்பட்டதுடன் கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.
kalmunaihot3kalmunaihot2

No comments:

Post a Comment