Search This Blog

Pages

Wednesday, January 19, 2011

அறிந்துக் கொள்வோமே..!


கடலில் வாழ்ந்து குட்டிப் போட்டுப் பால் கொடுக்கும் உயிரினங்களுள் ஒன்று திமிங்கலம். தாயின் அடிவயிற்றில் வாயை வைத்துப் பாலருந்தும் குட்டி, ஒரு தடவைக்கு 40 லிட்டர் பால் உட்கொள்ளும்.

அதற்கொப்ப நாள்தோறும் அதன் எடை 100 கிலோ ஏறிச்செல்லும். ஒன்றரை மீட்டலிருந்து 37 மீட்டர் வரை நீலமுள்ள திமிங்கலங்கள் இருக்கின்றன. ஒரு திமிங்கலத்தின் நாக்கு மட்டும் 4 டன் எடையிருக்கும்.

ஒரு திமிங்கலத்தில் இருந்து 20 பீப்பாய் எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும், அம்பர் என்னும் சுகந்த பொருளும் பெறலாம். ஆபத்து நேரத்தில் திமிங்கலம் எழுப்பும் ஒலி 11 கிலோ மீட்டர் வரையில் கேட்கும். அவ்வொலியைக் கேட்டுப் பிற திமிங்கலங்கள் உதவிக்கு விரைந்து வரும்.

திமிங்கலம் வாலைச் சுழற்றியடித்தால் பெரிய படகுகளும் கவிழ்ந்துவிடும். ஒரு திமிங்கலம் பத்து யானையின் எடையினை உடையது. நாக்கு மட்டும் ஒரு யானையின் எடையினைக் கொண்டது.

No comments:

Post a Comment