Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

பரவும் புதிய வகை சுவாசநோய் : சார்ஸ் வைரஸை ஒத்தது


new sars_virus
2003-இல் உலகின் பலபாகங்களிலும் பரவி நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்படக் காரணமான சார்ஸ் வைரஸ் நோயை ஒத்த புதிய சுவாசநோய் ஒன்றை பிரிட்டனில் சிகிச்சையளிக்கப்படும் நபர் ஒருவரிடமிருந்து மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கட்டாரிலிருந்து விமான-ஆம்பியூலன்ஸ் மூலம் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்ட 49 வயது ஆண் ஒருவரிடம் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இதேவிதமான சுவாசத்தைப் பாதிக்கின்ற வைரஸொன்று சவூதி அரேபியாவில் உள்ள ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டது, அதன்பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த புதிய வைரஸால் என்ன வகையான ஆபத்து உண்டாகலாம் என்று நிபுணர்கள் ஆராய்ந்துவருகிறார்கள்.
இந்த தகவலின் பின்னர், உலக சுகாதார ஸ்தாபனமும் இதுவரை எந்தவிதமான வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாட்டுகளையும் விதிக்கவில்லை.
இதேவேளை, உலகில் 2 பேரிடம் இந்த வைரஸ் இதுவரை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தில் சுவாசநோய்கள் சம்பந்தப்பட்ட பிரிவுக்குத் தலைவராக உள்ள பேராசிரியர் ஜோன் வொட்சன் கூறினார்.
சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்காக இந்த நோய் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த வைரஸ் ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றுவதற்கான குறிப்பான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்களுக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இப்போதைக்கும் எவ்விதமான ஆலோசனைகளும் கூறுவதற்கில்லை என்றும் பேராசிரியர் ஜோன் வொட்சன் மேலும் சுட்டிக்காட்டினார்.
இப்போதைக்கு இந்த புதிய வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக கவலைப்படத் தேவையில்லை என்றும் மிக சாதூரியமான தொழிநுட்ப சோதனை முறையைக் கொண்டுதான் அந்த வைரஸ் கூட கண்டறியப்பட்டிருக்கலாம் என்றும் லண்டன் இம்பிரியல் கல்லூரியின் சுவாசத் தொற்று ஆய்வுமையத்தின் இயக்குநர் பீட்டர் ஓப்பன்சோவ் தெரிவித்தார்.
பொதுவாக சுவாசப் பாதையை தாக்கி, சாதாரண தடிமனையும் சார்ஸ் எனப்படுகின்ற கடுமையான திடீர் சுவாசநோயையும் ஏற்படுத்துகின்ற ஒருவகை வைரஸை உள்ளடக்கிய பெரிய வைரஸ் குடும்பத்தைகொரோனாவைரஸ் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
இப்படியாக இதற்கு முன்னர் மனிதர்களிடத்தில் கண்டறியப்பட்டுள்ள வைரஸுகளிலும் பார்க்க இந்த புதிய வைரஸ் வித்தியாசப்படுகின்றமை தான் நிபுணர்களின் இந்தளவு கரிசனைக்கு காரணம்.
மத்தியகிழக்கைப் பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களில் வேறுவகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பதிக்கப்பட்ட சிலரும் சிகிச்சைப் பெற்றிருக்கிறார்கள்.
அப்படியான ஒருவர் லண்டனில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்பட்ட நோய் பற்றியும் இப்போது ஆராயப்பட்டுவருகிறது. அவரது நோய்க்கும் இப்போது லண்டனில் இருக்கும் கட்டார் வாசியை தாக்கிய வைரஸுக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்றும் தேடப்படுகிறது.
பிரிட்டனில் அதுதவிர வேறு எந்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும் இதுவரை கவனத்துக்குவரவில்லை.
2002-இல் மனிதர்களின் சுவாசத் தொகுதியை கடுமையாக தாக்கிய சார்ஸ் வைரஸ் உலகம் முழுவதும் பரவி மரணபயத்தை உண்டுபண்ணியது.
ஹாங்காங்கிலிருந்து 30க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி கிட்டத்தட்ட 800 பேரைக்கொன்ற இந்தநோய் முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும் அது பரவுவது 2003-இல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.
சுவாசத்தொகுதியை தாக்குகின்ற மற்ற வைரஸுகளைப் போலவே இந்த சார்ஸ் தொற்றும் மனிதர்களின் உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் மூலமே, குறிப்பாக தும்மல் மற்றும் இருமல் மூலமே மற்றவர்களுக்குத் தொற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஹ்ரம் இன்றி ஹஜ் சென்ற பெண்கள் சவூதியில் தடுத்து வைப்பு


ஹஜ் செய்வதற்கு சென்ற சுமார் 400 நைஜீரிய பெண்களை சவூதி நிர்வாகம் தடுத்து வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை ஜித்தா நகரை சென்றடைந்த ஹாஜிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நெருங்கிய ஆண் துணை (மஹ்ரம்) இன்றி ஹஜ் கடமைக்கு வந்த 398 நைஜீரிய நாட்டு பெண்கள் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் நைஜீரியாவுக்கு நாடு கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்படவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவதாக நைஜீரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் பயணத்திற்கு முன்னர் இது தொடர்பில் அறிவிக்காத நிலையில் இவ்வாறு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு நைஜீரிய ஹஜ் குழுவுக்கான தலைவர் முஹம்ம சாத் கண்டனம் வெளியிட்டுள்ளார். “ஹஜ் குழுவின் தலைவர் என்ற வகையில் சவூதி எம்மிடமான பேச்சுவார்த்தையின் போது இது குறித்து எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது எமக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.
இதேவேளை புனித ஹஜ் கட மைகளை நிறைவேற் றுவதற்காக செல்லும் இலங்கை ஹாஜிகளின் குழுவின் முதல் விமானம் இன்று புதன்கிழமை (26) இங்கிருந்து புறப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார்.
சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஹஜ்ஜாஜிகள் சவுதியா எஸ்.வி. 789 என்ற விமானத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு கொழும்பிலிருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி சென்றடையவுள்ளனர்.
இலங்கைக்கென நிர்ணயிக்கப்பட்ட கோட்டா அடிப்படையிலேயே இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும், இதற்கமைய இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 2800 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏனைய ஹாஜிகள் தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் மக்கா செல்லவுள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் வரை இலங்கையிலிருந்து ஹாஜிகளை ஏற்றிச் செல்லும் விமான சேவைகள் இடம்பெறுமெனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

நாட்டை மீட்டுத்தாருங்கள் : சர்வதேசத்திடம் மாலி இராணுவம்


mali army expect international army support to take the country control from al-quita
மாலி அரசு, உடனடியாக தமது நாட்டுக்கு வெளிநாட்டு படைகளை அனுப்பி, தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்டுத் தருமாறு கோரியுள்ளது.பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் Laurent Fabius இதை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரெஞ்ச் டி.வி. சேனல் TF1, சற்றுமுன் செய்தி வெளியிட்டது.
பிரான்ஸ் தமது ராணுவத்தை மாலிக்கு அனுப்புமா என்ற கேள்விக்கு, “அது தொடர்பாக ஆராயப்படும்” என்ற பதில் மட்டுமே பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரால் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மாலியில் ஏற்பட்ட ராணுவ புரட்சியில், நாட்டின் ஜனாதிபதியின் பதவி பறிக்கப்பட்டது. அதையடுத்து, துவாரெக் தீவிரவாத அமைப்பு, ராணுவத்தை விரட்டிவிட்டு, நாட்டின் மூன்றில் இரு பகுதியை கைப்பற்றி, தம்வசம் கொண்டுவந்தது.
இப்போது, துவாரெக் தீவிரவாத அமைப்பிடம் இருந்து அந்த பகுதிகளை, அல்-காய்தா ஆதரவு இயக்கம் ஒன்று கைப்பற்றியுள்ளது. அதுதான் சிக்கல்.

ஆட்டம் காணும் அரசுகள் : இரத்தம் சிந்தவில்லை ஆனால் தொடர்கிறது போர்


Cyber-war-between-Iran-and-US
போர் என்று சொன்னாலே எம் கண் முன்னே நிற்பது ஆயிரம் ஆயிரம் இராணுவ வீரர்களும் அவர்களின் அணிவகுப்புக்களுமே ஆனால் அறைக்குள் இருந்து கொண்டே இரண்டு நாடுகள் போர் தொடுக்க முடியும் என்பதை எம்மில் எத்தனை பேர் அறிவோம்?தகவல் தொழில்நுட்பம் தாராளமாக எம்மை வந்தடைந்திருப்பதன் விபரீதத்தை எம்மில் எத்தனை பேர் அறிவோம் ? இணையம் என்பது எமக்களிக்கும் சேவைகள் மட்டுமே எமக்கு தெறிகின்றது ஆனால் அதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மம்..? அரச சேவைகள் பொதுச்சேவைகள் கணனிமயப்படுத்தப்படுவதை விரும்பும் நாம் அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை புரிந்து கொள்வதில்லை
http என்பதன் அா்த்தம் எத்தனை  பேருக்கு தெரியும் ? அதன் உபயோகம் எத்தனை பேருக்கு தெரியும்?
வலைத்ளங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் அதன் மொழிகள் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கியதே இந்த hyper text transfer protocol (http)   உதாரணமாக ஒரு வலைத்தளத்தி் முகவரி http://www.voknews.com என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் http பற்றியே இங்கு கூறப்பட்டது.
நாம் எமது கணனியிலிருந்து ஒரு செய்தியை அனுப்புகிறோம் என்றால் அது எவ்வாறு இன்னுமொருவறை சென்றடைகின்றது? எமது இணைய வழங்குனா் வித்தியாசமானவா் , எமது இணைய உலாவி வித்தியாசமானது , உலாவிகளின் மொழி வித்தியாசமானது என்று வேறுபடும் போது எவ்வாறு சரியான தகவல் மற்றவரை சென்றடைகின்றது? இங்குதான் http எனும் அமெரிக்காவின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு பயன்படுத்தப்படுகின்றது. அதாவது எமது தகவல்கள் இன்னுமொரு ஊடகத்தனூடாவே செல்கின்றது என்பது உறுதியாகின்றது. ஆகவே அது பாதுகாப்பானது என்று எம்மால் எவ்வாறு கூற முடியும்…?
சரி இணையம் பாதுகாப்பற்றது என்பதை பார்த்து விட்டோம் அதனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஆபத்துக்களையும் பார்த்து விடுவோம் .
சில வருடங்களின் முன்னா் ரஷ்யா  ஜோர்ஜியா யுத்தத்தில் ரஷ்யா எவ்வாறு ஜோர்ஜியாவை தன் வழிக்கு கொண்டு வந்தது தெரியுமா?
கடந்த வருடம் உலகத்தையே ஆட்டி வைக்கும் அமெரிக்காவின் ஆளிள்ளா உளவு விமானம் எவ்வாறு ஈரானின் இராணுவ விமான தளத்தில் தரையிறங்கியது தெரியுமா?
இவையனைத்திற்கும் பின்னால் நிற்பவா்கள்தான் கணனி வல்லுனா்கள் இவர்கள் செய்யும் இப்படிப்பட்ட ஒரு நாட்டை அடிமைப்படுத்தும் வேலைக்கு பெயா்தான் சைபா் யுத்தம்
இவா்கள் செய்யும் வேலை இலகுவான ஒன்றல்ல ஆனால் அரசுகளை ஆட்டம் காண வைத்திருக்கின்றது. அதிலும் அமெரிக்காவே ஆடும் அளவுக்கு அதன் வளா்ச்சி வியாபித்திருக்கின்றது.காரணம் இதுவரை அவா்கள்தான் இப்படியான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்தனா். அறிவியல் என்ற போர்வையில் அவர்கள் எமக்கு அளித்த அனைத்திலம் அவர்களின் உளவு வேளைகள் இடம்பெற்று வந்ததை இன்று அரசுகள் நன்றாக புரிந்து கொண்டுள்ளன அதிலும் மத்திய கிழக்கு நாடுகளிலேதான் இவா்களின் விளையாட்டுக்கள் அதிகம் இடம்பெறுவது வழக்கம்.
மத்திய கிழக்கை இறத்த வெள்ளத்தில் ஆழ்த்த தயராக இருக்கும் இரண்டு நாடுகளே இந்த வகை யுத்தத்தில் இன்று அதிகம் மோதிக்கொண்டு இறுக்கின்றன. ஈரானும் இஸ்ரேலுமே அந்த நாடுகள்
இது சற்று சுவாரஷ்யமான விளையாட்டு ஒரு பக்கம் அமெரிக்கா , பிரித்தானியா , பிரான்ஸ் முக்கியமாக இஸ்ரேல் ஏனென்றால் மத்திய கிழக்கு நாடுகளின் இராணுவ பலவீனமே இவர்களின் பலம் அதனாலயே பலஸ்தீன் என்ற ஒரு நாட்டு மக்களை விரட்டிவிட்டு அந்த நாட்டை உலக வரைபடத்திலிருந்தே அகற்றிவிட்டு இஸ்ரேல் தேசத்தை நிறுவினா். மறுபக்கம் ஈரான் ரஷ்யா மற்றும் சீனாவின் உதவியுடன் .
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம். ஈரானின் அணுசக்தி செயற்பாடுகளை முடக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அமெரிக்கா தயாரித்து ஈரானின் நத்தான்ஸ் அணுவாலையை நோக்கி ஏவிய கணினி வைரஸ், அணுவாலையின் கட்டமைப்பில் இருந்து தவறுதலாக வெளியேறி கணினி வலைப்பின்னல்களில் பரவிய சமயத்தில் கணினி பாதுகாப்பு வல்லுனர்கள் அதனைக் கண்டுபிடித்தார்கள்.
அதற்கு ஸ்டக்ஸ்நெட் (Stuxnet ) ௭ன்று பெயரிட்டார்கள். ஸ்டக்ஸ்நெட் போன்றதொரு வைரஸை சமானியர்கள் உருவாக்க முடியாது. அதன் பின்னணியில் மாபெரும் சக்தியொன்று உள்ளதென வல்லுனர்கள் கூறியபோது, அமெரிக்கா மௌனம் காத்தது. ஆனால், அந்த வைரஸை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து தீவிரமாக ஆராய்ந்தபோது அது அமெரிக்காவின் தயாரிப்பு ௭ன்பது நிரூபணமானது.
இனிமேலும் ரகசியத்தைக் கட்டிக்காக்க முடியாது ௭ன்பதை அமெரிக்கத் தலைவர்கள் உணர்ந்தார்கள். வெள்ளை மாளிகையின் ரகசிய அறையில் கூடி அடுத்து ௭ன்ன செய்யலாமென ஆராய்ந்தார்கள். ஸ்டக்ஸ்நெட் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னமும் உலகம் மீண்டெழாத நிலையில், இன்னொரு அதிர்ச்சி. புதியதொரு கணினி வைரஸ்.
இதன் பெயர் ப்ளேம் (Flame) தமிழில் சுவாலை ௭னலாம். புதிய வைரஸ் ஈரானை மாத்திரம் தாக்கவில்லை. மத்திய கிழக்கின் பல நாடுகளில் உள்ள கணினிகளில் இருந்து முக்கியமான தகவல்களைத் திருடியிருக்கிறது. இந்த ப்ளேம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் மிகவும் மோசமானதென கணினி பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஸ்டக்ஸ்நெட் வைரஸை உருவாக்கிய தேசமே இதனையும் உருவாக்கியிருக்கக்கூடும் ௭ன்பது வல்லுனர்களின் ஊகம். ப்ளேம் வைரஸை உருவாக்கியது தாமே ௭ன்பதை இதுவரை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. சில நாட்கள் கழித்து உண்மை தெரிய வரலாம். உண்மை ௭துவானதாகவும் இருக்கலாம்.
ஆனால், இன்று இத்தகைய வைரஸ்களால் உலகம் ஆபத்தானதாக மாறியிருக்கிறது ௭ன்பதே மறுக்க முடியாத யதார்த்தம். முதலில் ஸ்டக்ஸ்நெட் வைரஸை நோக்குவோம். இந்த வைரஸ், ஈரானின் அணுவாலைகள் ௭ன்ற அரசியல் சர்ச்சையுடன் தொடர்புடையதாகும். ஈரானில் அணுவாலைகள் இருக்கின்றன. அந்நாடு அணுவாயுதங்களைத் தயாரிக்கிறதென அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் கருதுகிறது.
தாம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காகவே அணுவாலைகளை இயக்கி வருவதாக ஈரானிய அரசாங்கம் வாதிடுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தும் இழுபறி நிலையில் நீடிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அணுவாயுத கண்காணிப்பு அமைப்பின் ஊடாகவும் தீர்வு காணமுடியாத நிலை. தீர்வு முயற்சிகள் ஒருபுறமிருக்க,
ஈரானை ௭ப்படியாவது அடக்க வேண்டும் ௭ன்பது அமெரிக்காவின் நோக்கம். நேரடியாகத் தாக்க முடியாது. தாக்கினால் மத்திய கிழக்கு முழுவதும் போர்க்களமாக மாறிவிடும். ஈரானை ௭ன்ன செய்யலாமென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தான், ஜெனரல் ஜேம்ஸ் கெட்ரைட் ௭ன்பவர் புதியதொரு யோசனையை முன்வைத்தார்.
அது 2006ஆம் ஆண்டில். ஈரானின் நத்தான்ஸ் நிலக்கீழ் அணுவாலையின் இயந்திரங்களை இயக்கக்கூடிய கணினி வலைப்பின்னலை ௭ப்படியாவது ஊருருவி, அணுவாலையின் சுழற்சி(CentriFuges) இயந்திரங்களை செயலிழக்கச் செய்வது அவரது திட்டம். ஈராக்கில் பேரழிவு தரும் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிக் கொண்டு அந்நாட்டை ஆக்கிரமித்ததன் விளைவுகளால் ஜோர்ஜ் டபிள்யு புஷ் மூக்குடைபட்டு நின்ற வேளை.
ஈரானில் அணுவாயுதங்கள் உள்ளதாகக் கூறிக் கொண்டு அந்நாட்டை ஆக்கிரமிக்க முடியாத நிலையில் இருந்ததால் ஜெனரல் கெட்ரைட்டின் யோசனைக்கு அவர் உடன்பட்டார். ஒலிம்பிக் கேம்ஸ் (Olypique Games) ௭ன்ற குறியீட்டுப் பெயருடன், கணினி வைரஸை உருவாக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
நத்தான்ஸ் அணுவாலையை ஊடுருவுதல் ௭ன்பது இலேசுப்பட்ட காரியமாக இருக்கவில்லை. அதற்காக அமெரிக்கா இஸ்ரேலின் துணையை நாடியது. இஸ்ரேலின் புலனாய்வு அமைப்புகள் நத்தான்ஸ் ஆலை ௭வ்வாறு செயற்படுகிறது ௭ன்ற விடயத்தை அமெரிக்க கணினி வல்லுனர்களுக்குப் பெற்றுக் கொடுத்தன. அமெரிக்க நிபுணர்கள் நித்திரையில்லாத பல இரவுகளுக்குப் பின்னர் ஒரு கணினி வைரஸை வடிமைத்தார்கள்.
நத்தான்ஸ் அணுவாலையின் செயற்பாடுகளையொத்த மாதிரி வலைப்பின்னலை உருவாக்கி, வைரஸை பரிசோதித்துப் பார்த்தார்கள். இந்த முயற்சியில், பாகிஸ்தானிய அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ௭ன்பவர் கறுப்புச் சந்தையில் விற்றதாகக் கூறப்படும் சுழற்சி இயந்திரங்களுக்குரிய தொழில்நுட்பமும், லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியிடம் இருந்து பெற்ற மாதிரி வடிவங்களும் கூட பயன்பட்டதாகத் தெரிகிறது.
சகல காரியங்களும் பூர்த்தியாகி நத்தான்ஸ் அணுவாலையின் கணினி வலைப்பின்னலுக்குள் கணினி வைரஸ் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக, சுழற்சி இயந்திரங்கள் அசுர வேகத்தில் சுழன்றன. ஈரானிய விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி. ஆலையில் ஏதோ கோளாறு ௭ன்று நினைத்துக் கொண்டு, அவர்கள் பலரை வேலை நீக்கம் செய்தார்கள். இந்த சமயத்தில் அமெரிக்காவின் ஆட்சிபீடத்தில் மாற்றம் நிகழ்ந்தது. புஷ் சென்றார். மாற்றம் ௭ன்ற தாரகத்துடன் ஓட்டுக் கேட்டு வெற்றி பெற்ற ஓபாமா வந்தார்.
ஆனால், ஈரானை இல்லாதொழிக்க வேண்டும் ௭ன்ற கொள்கையில் மாற்றம் இருக்கவில்லை. ஒலிம்பிக் கேம்ஸ் கணினி வைரஸ் திட்டத்தை தொடர்ந்து ரகசியமாகப் பேணி ஈரானைத் தாக்குமாறு புஷ் அன்புடன் விடுத்த வேண்டுகோளை ஒபாமா தாழ்மையுடன் சிரமேற்றார். அவரது ஆட்சியிலும் நத்தான்ஸ் ஆலையின் மீது அடுத்தடுத்து கணினி வைரஸ்கள் ஏவப்பட்டன.
2010ஆம் ஆண்டு ஏவப்பட்ட வைரஸின் நிரலில் சிறியதொரு தவறு விழைந்தது. நத்தான்ஸ் ஆலையின் சுழற்சி இயந்திர வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட பொறியியலாளரின் கணினிக்குள் அது தொற்றிக் கொண்டது. பொறியியலாளர் கணினியை வெளியே ௭டுத்துச் சென்று அதனை இணையத்துடன் இணைத்தபோது, அந்த வைரஸ் கணினியின் ஊடாக உலகெங்கும் பரவியது. அதனை கணினி வல்லுனர்கள் கண்டுபிடித்தார்கள்.
ஸ்டக்ஸ்நெட்டின் கதை இதுதான். இதில் விஷயம் ௭ன்னவென்றால், தமது குட்டு வெளிப்பட்டு விட்டது குறித்து அமெரிக்கத் தலைவர்கள் கவலைப்படவில்லை. தாம் திட்டமிட்டு நடத்திய சைபர் தாக்குதலை ஈரான் சுதாரித்துக் கொண்டு மீண்டெழுந்து விட்டது ௭ன்பதே அவர்களின் கரிசனையாக இருந்தது. ஸ்டக்ஸ்நெட் வைரசை உருவாக்கும் முயற்சிகளில் தொடர்புடையவர்களிடம் இருந்து பத்திரிகையாளர்கள் கறந்த தகவல்களில் இருந்து இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில், இந்த வைரஸூக்கும் தமக்கும் இடையில் தொடர்பில்லையென அமெரிக்கர்கள் கூறியபோதும், குட்டு வெளிப்பட்ட சமயம் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். ப்ளேம் வைரஸ் விவகாரத்தில் ௭ன்ன நடக்கும் ௭ன்பது தெரியவில்லை. ஸ்டக்ஸ்நெட்டும், ப்ளேமும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டன. அதுவரை அவை மௌனமாக வேலையைக் காட்டிக் கொண்டிருந்தன.
இவை போன்று இன்னமும் ௭த்தனை வைரஸ்கள் இணையத்தளத்தில் உலா வருகின்றன ௭ன்பது முக்கியமான கேள்வி. இத்தகைய வைரஸ் மென்பொருள்கள் சமகால உலகின் அழிவிற்கும் வழிவகுக்க முடியுமென ப்ளேம் வைரஸை கண்டுபிடித்த இயூஜின் கெஸ்பர்ஸ்க்கி ௭ன்ற ரஷ்யர் கூறுகிறார். உண்மை தான். இன்றைய உலகம் கணினி வலைப்பின்னல்களால் முற்று முழுதாக பிணைக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகின் விமானப் போக்குவரத்துத் துறை முழு அளவில் கணினியில் தங்கியுள்ளது.
மின்சார வலைப்பின்னலில் கணினிகளால் இணைக்கப்பட்டுள்ளன. இதை விட தகவல் தொடர்பாடல் துறையில் கணினியின் ஆதிக்கம் அதிகம். இத்தகைய வலைப்பின்னல்கள் கணினி வைரஸால் தாக்கி செயலிழக்கப்படும்போது ஒட்டுமொத்த உலகின் செயற்பாடும் ஸ்தம்பித்துப் போகக்கூடிய நிலை இருக்கிறது. ஒரு வலுவான கணினி வைரஸை உருவாக்கி அதனை இன்னொரு நாட்டின் மீது ஏவி விடுகையில், குறித்த நாட்டையும் தாண்டி மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும் ௭ன்பதை ஏவி விடுவோர் அறியாமல் இல்லை.
ஆனால், அழிவை ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கையில் பின்விளைவுகள் பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ராஜதந்திர முயற்சியாலும், மரபு வழிப் போர்களாலும் ஈரானை அடிபணிய வைக்க முடியாத நிலையில், அதனை இலக்கு வைத்து ஸ்டக்ஸ்நெட் வைரஸை ஏவி விடுவதை சைபர் யுத்தம் ௭ன்று அமெரிக்கா கூறிக் கொள்ள முடியும்.
மேற்கு நாடுகளின் செயற்பாடுகளுக்கு ஈரானும் சும்மா இருக்கவில்லை கடந்த வருடம் உலகத்தையே ஆட்டி வைக்கும் அமெரிக்காவின் ஆளிள்ளா உளவு விமானம் ஈரானின் பென்டகன் மீதான ஈரானின் சைபா் தாக்குதலினாலேயே சாத்தியமானது.
அது மட்டுமன்றி இன்றைய காலங்களில் அடிக்கடி இஸ்ரேலுடன் இப்படியான யுத்தங்கள் மூலமே அரேபிய இளைஞா்கள் பலா் மோதிக்கோள்கின்றனா் காரணம் அணு ஆயுதங்கள் கூட இங்த சைபா் யுத்தத்தின் முன்னால் செல்லாக் காசாகத்தான் போய்விடுகின்றன. அறிவுக்கும் தேடலுக்கும் தைரியத்துக்குமே இங்கு பலம்
அண்மையில் வெளியாகிய இஸ்லாமிய அவதூறு திரைப்படத்துக்கு பதிலடியாக
ஈரானிய கணணி நிபுணர்கள் குழு ஓன்று 370 இஸ்ரேலிய வெப்தளங்களை இன்று வெற்றிகரமாக இன்று தகர்த்துள்ளதாக தெரிய வருகின்றது
Iranian Datacodersஎன்று தம்மை அழைத்துகொண்ட கணணி நிபுணர் குழு ஓன்று இஸ்ரேலின் உள்ள அரச சார்பான வர்த்தக இபாதுகாப்பு பொருளாதார மற்றும் இன்டர்நெட் விநியோகிக்கும் நிறுவனங்களின் 370 வெப்தளங்கள் இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன .
இஸ்ரேலின் முன்னணி ono security மற்றும்  teva வெப்தளங்களும் தகர்க்கப்பட்ட வெப்தளங்களில் அடங்கும்
நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை அவதூறு கூறும் திரைப்படத்தை தயாரிக்க  யூத அமைப்புகளும் பல யூதர்களும் நிதி உதவி செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த செய்திகள் எமக்கு சொல்லும் பாடம் வல்லரசுகள் கூட அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த அஞ்சுகின்றன காரணம் ஏவப்படும் அணு ஆயுதத்தின் இலக்கை சைபா் தாக்குகலின் மூலம் திசை திருப்பிவிட்டால்? அது தனது சொந்த நாடாகவே இருந்தால்?? மாற்ற முடியும் என்று ஈரான் அமெரிக்க உளவு விமானத்தை தரையிறக்கியதன் மூலம் நிறுபித்துவிட்டது.
இனி வரும் காலம் பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளே அஞ்சி வாழ வேண்டி வரும் சொந்த நாட்டில் வைத்தே அவை வெடிக்க வைக்கப்பட்டு விடுமோ என்று. அல்லது கணனி வல்லுனா்களின் சேவை அவர்களுக்கு தேவை

“பலஸ்தீனர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்காத வரை எந்த ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட மாட்டாது”:முர்சி


Muslim-Brotherhood-Says-Mursi-Wins-Egypt-Vote-270x170
முர்சியின் இந்த அறிவிப்பை அடுத்து 1979 ஆம் ஆண்டில் எகிப்துடன் செய்து கொள்ளப்பட்ட சமாதானஉடன்படிக்கையில் எந்த மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்போவதில்லைஎன்று இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் மாற்றங்களைகொண்டு வருமாறு எகிப்தில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றநிலையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
‘இஸ்ரேலுடன் செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையில் நிரந்தர மாற்றம்கொண்டுவருவதை நாம் நிராகரிப்போம்.இஸ்ரேல் அந்த உடன்படிக்கையில்எந்த மாற்றங்களையும் கொண்டு வர அனுமதிக்காது .’ என்று இஸ்ரேலியவெளிநாட்டமைச்சர் அவிக்டோர் லைபர்மன் இஸ்ரேலிய வானொலிஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்
இதேவேளை அமெரிக்காவில் நடைபெறும் ஐ நா பொதுச்சபை மாநாட்டில்கலந்து கொள்ள அங்கு விஜயம் செய்துள்ள எகிப்தின் ஜனாதிபதி முஹம்மதுமுர்ஷிஇமத்திய கிழக்கில் சர்வாதிகாரிகளை ஆட்சியில் இருக்க ஆதரவுவழங்கும் அமெரிக்க கொள்கையை விமர்சித்தார்
நியூயோர்க் டைம் செய்திதாளுக்கு வழங்கிய பேட்டியில் பலஸ்தீனம்தொடர்பான அமெரிக்காவின் கொள்கை மாற வேண்டும் என்று கோரியுள்ளார்
‘பலஸ்தீனர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்காத வரை ஒப்பந்தம்பூரணப்படுத்தப்பட மாட்டாது ‘ என்று அவர் கூறினார்

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள்!!!!


results
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது இதனை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவா்கள் பார்க்க முடியும்.

கல்முனையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர் மாயம்


sm
- அப்துல்லாஹ் -
நேற்று முன்தினம் மாலை வழமை போல் ஆழ் கடலில் மீன் பிடிப்பதற்காக எம்.வை.றுஸ்கின் என்பவருக்கு சொந்தமான டங்கிப் படகில் தண்டையல் (படகை வழி நடாத்துபவர்) உட்பட மூன்று பேர் மாலை 3.00 மணியளவில் கல்முனைக் கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய எம்.ஐ.லத்தீப் என்பவரே இவ்வாறு காணாமல் போனவராகும்.
இவரை நேற்று மாலை வரை கடலிலும் கரையிலும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக கல்முனைப் பொலிஸிலும் கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று இரவு 7.30 மணியளவில் கரைக்கு வந்த அப்படகில் சென்ற அஷ்ரப் (வயது 35), மற்றும் சின்னவன் (வயது 45) ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக கேட்ட போது
மீன் பிடித்து விட்டு அதிகாலையில் கரையை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது நேரம் 4.15 அளவில் வெளிச்சம் தெரிகிறது நீங்கள் சற்று தூங்குங்கள் நான் படகை ஓட்டுகிறேன் என தண்டயல் கூற நாங்கள் உள்ளுக்குள் தூங்குவதற்காகச் சென்றோம். அப்போது திடீரென உக்கல் (பெரிய அலை) அடித்தது. உடனே வெளியே வந்து பார்த்த போது தண்டயலைக் காணவில்லை. அவ்வேளையிலிருந்து வேறு படகுகளின் உதவியுடன் தேடியும் அவரைக் கண்டு பிடிக்கமுடியவில்லை எனக் கூறினார்கள்.
நேற்று கல்முனை துறையைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லாமல் துக்கம் அனுஷ்டித்தனர். இன்று கல்முனை துறையில் தரித்து நிற்கும் சகல இயந்திரப்படகுகளும் இவரை தேடும் பணியில் ஈடுபடவுள்ளன.
இலங்கையின் எந்தப்பகுதியிலாவது இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத் தலைவர் முஹம்மட் நஸீரின் தொலைபேசி ( 0772355430) இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டகப்பட்டுள்ளனர்.

மூன்றாம் உலகப் போருக்கு இஸ்ரேல் தயாரா..? ஈரான்


iran nuclior
பொருளாதார தடை விதித்து ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவுக்கோ அதன் ஆதரவு நாடுகளுக்கோ அச்சப்படாமல் ஈரான் தன்னுடைய செயற்பாடுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெளிப் பிரிவு கொமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் செயலாகும் என்றார்.
அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தாக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இஸ்ரேல் தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால் நிச்சயம் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை மேம்படுத்துவது இஸ்ரேலுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அதனால் ஈரானில் உள்ள அணு உலைகளை அழித்து விடுவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது.
ஆனால் ஈரானில் அணு ஆயுத திட்டம் நல்ல நோக்கங்களுடன் தான் செயற்படுத்தப்படுகிறது என ஈரான் கூறியுள்ளது.
இதற்கிடையில் ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் முகமத்து அலி ஜபாரி கூறுகையில், ஈரான் மீது போர் தொடுப்பது தான் ஒரே வழி என்று இஸ்ரேல் அதிகாரிகள் நினைக்கின்றனர்.
அவர்கள் மட்டும் போர் தொடுத்தால் அவர்களின் அழிவுக்கு அது வழி வகை செய்துவிடும் என்றார்.

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் – இங்கிலாந்து எம்.பி அதிரடி


487476_422318317831162_1577161532_n
அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.
ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொ
ன்றனர் என்றும் ஜார்ஜ் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

இலவசக் கல்வியை காக்க இரு பேரணிகள் தலைநகரை நோக்கி..


"save state education" university lectures & students strike
இலவசக் கல்வி மற்றும் அரசாங்க பல்கலைக்கழகத் திட்டத்தை பாதுகாக்குமாறு கோரி பல்கலைக்கழக ஆசிரியர்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிகள் கண்டியிலிருந்தும் காலியிலிருந்தும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன. 
காலியில் இருந்து இன்று ஆரம்பமாகும் அரச கல்வியை பாதுகாப்போம் எனும் பேரணி எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பிரதான எதிர்க்கட்சி உட்பட்டோர் இப் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த பேரணியிற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை வழங்குவதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரை எந்தவித தீர்வும் முன்வைக்காத நிலையில் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியும் ஆரம்பமாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு ஆர்ப்பாட்டப் பேரணிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.