Search This Blog

Pages

Showing posts with label Articles / News. Show all posts
Showing posts with label Articles / News. Show all posts

Wednesday, December 18, 2013

டீன்-ஏஜ் பிள்ளைகளை பெற்றோர் எவ்வாறு வழிநடத்தல்!


Muslim teenage boys laughing at the seashore , Galle Fort , Sri Lanka
டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படின்னா இதை படிங்க. 
1. அன்பாக இருங்கள்:
உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம்.
டீன்-ஏஜ் பருவம் என்பது நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம். அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள். அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன் வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம்.
2. கட்டாயப்படுத்தாதீர்கள்:
உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். உதாரணமாக, “இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
3. சந்தேகப்படாதீர்கள்:
இந்த பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம். எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்.
4. கோபப்படாதீர்கள்:
குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். இந்த பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே அவர்களை திருத்த முடியும். நீங்கள் கோபப்பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர்.
உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும். எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள்.
5. உற்று நோக்குங்கள்:
உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள்; தூங்க மாட்டார்கள். இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாலும், பிரச்சனை அளவுக்கு அதிகமாக போகும் போது, அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.

சுவாசப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம்


pjt1p07_0
சிறு சுவாசப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி பீட்டர் ஜே. மஸ்ஸோன் தெரிவித்தார்.
புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் சாதாரணமாக மூச்சு விடும்போது ஒரு வகை ரசாயனம் வெளியேறுவதாக உணரப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்காவில் உள்ள கிளவ்லேண்ட் நுரையீரல் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமைய இயக்குநரான பீட்டர் ஜே. மஸ்ஸோன் கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் ஒருவித ரசாயன தொடர்புள்ள சதை வளர்ச்சியை தூண்டுகின்றன. தற்போது சுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் மேற்கொண்டுள்ள புற்றுநோய் ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

நட்பு நாட்டு தலைவர்களின் டெலிபோன் பேச்சு ஒட்டுகேட்பு நிறுத்தி வைக்க ஒபாமா உத்தரவு


ce39ce95-16be-463c-9a83-ccbe863dc3e1_S_secvpf
அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்பதை நிறுத்திவைக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பா உளவு நிறுவனங்கள் திரட்டிய தகவல்களை என்எஸ்ஏவுடன் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏவின் முன்னாள் அதிகாரி ஸ்நோடென்  வெளியிட்ட தகவலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கெல் உள்பட 32 நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் பேச்சுகளை என்எஸ்ஏ ஒட்டு கேட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்தி வருகிறது.
இதனால் இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒபாமாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என என்எஸ்ஏ விளக்கம் அளித்தது. உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் ஒட்டு கேட்ட விவகாரம் தற்போது அமெரிக்காவிற்கு இக்கட்டை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதுகுறித்து வெள்ளை மாளிகையில் உயர் மட்ட அதிகாரிகள் தலைமையிலான பரிசீலனை கூட்டம் நடைபெற்றது. அப்போது என்எஸ்ஏவின் இயக்குனர் கெயித் அலெக்சாண்டர் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளின் பொதுமக்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவையாகும். மாறாக, ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் தான் என்எஸ்ஏவுடன் ராணுவ ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொண்டன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி டயானே கூறுகையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள், அமெரிக்க குடிமக்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்பதை நிறுத்தி வைக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். டெலிபோன் ஒட்டு கேட்பதை தடை செய்துவது குறித்து விரைவில் அதிபர் ஒபாமா அறவிப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலாவை கொல்ல சதி செய்த நான்கு பேருக்கு 35 ஆண்டு சிறை


Evening-Tamil-News-Paper_77568781376
ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை அமைத்து போராடியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக வெள்ளையர்கள் அவ ரை 20 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைத்தனர். உலக நாடுகளின் நெருக்கடிக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் அவர் 1994ல் அதிபரானார். 90களிலும், 2000மாவது ஆண்டுகளிலும் அவரை கொல்லவும், அவரது ஆட்சியை கவிழ்க்கவும் போய்ரிமாக் என்ற வெள்ளையர் விவசாய முன்னணி என்ற அமைப்பு சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழும்பின. இதற்காக அந்த அமைப்பு பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையும் அரங்கேற்றியது. இதற்கு அந்த அமைப்பினர் பொறுப்பேற்பதாகவும் அறிவித்தனர்.
அந்த கால கட்டத்தில் ஒருமுறை மண்டேலா லிம்போபோ மாகாணத்தில் உள்ள பள்ளியை பார்வையிட காரில் சென்ற போது, அவர் செல்லும் வழியில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பாக அந்த சதி முறியடிக்கப்பட்டு, மண்டேலா அந்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். இந்த கொலை முயற்சி தொடர்பாகவும் அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த அமைப்பைச் சேர்ந்த 20 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நடை பெற்ற இந்த வழக்கில் நேற்று ஜோகன்னஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் மண்டேலாவின் ஆட்சியை கவிழ்க்க சதி மற்றும் அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 4 வெள்ளையர்களுக்கு தலா 35 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஏபென் ஜோர்டான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போதே இரண்டு பேர் இறந்து விட்டனர். இந்த வழக்கில் பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர்களை, அவர்கள் ஏற்கனவே விசாரணையின் போதே சிறை தண்டனையை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

துப்பாக்கி குண்டில் இருந்து உயிரை காப்பாற்றிய கையடக்கத் தொலைபேசி


d4deb447-7607-4f19-a3a3-c0fad6cd0549_S_secvpf
அமெரிக்காவில் உள்ள ஓர்லண்டோவின் நகரில் வின்டர் கார்டன் பகுதி உள்ளது. இங்கு ‘கியாஸ்’ அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் அங்கு ஒரு கொள்ளையன் புகுந்தான்.
முதலில் தனக்கு உதவி செய்யும்படி கேட்ட அவன் திடீரென தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கி காட்டி பணப் பெட்டியை திறக்கும்படி மிரட்டினான்.
அதற்கு அந்த ஊழியர் மறுத்து விட்டார். எனவே, அவருடன் இருந்த மற்றொரு ஊழியரையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினான். அவரும் பெட்டியை திறக்க மறுக்கவே ஆத்திரம் அடைந்த அவன் ஊழியரின் மார்பில் துப்பாக்கியால் சுட்டான். பின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
கொள்ளையன் சுட்டத்தில் ஊழியரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஏனெனில் இவர் தனது சட்டைப் பையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருந்தார்.
இதனால் கொள்ளையனின் துப்பாக்கி குண்டு ஊழியரின் மார்பை துளைக்காமல் செல்போன் தடுத்துவிட்டது. அந்த செல்போன் முன்பகுதி மட்டும் உடைந்து சேதம் அடைந்தது.
இந்த விவரம் உடனடியாக ஊழியருக்கு தெரியவில்லை. வின்டர் கார்டன் போலீசாரின் விசாரணையின் போது தான் தெரிய வந்தது.

ஆசிரியர் கற்பித்த வாழ்க்கைப் பாடம்


1384393_658508490849220_1751133110_n
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.
அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.
அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள். அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.
மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.
அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.
உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.
மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.
அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.
பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”
”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது.
உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”
“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”
“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”
அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.
ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

ஹெட்போனில் பாட்டு கேட்பவர்களுக்கு காது பிரச்சனை ஆபத்து


15974599-man-silhouette-with-headphone-and-sound-waves
ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு காது பிரச்சனை ஆபத்து ஏற்படும் என்று நியூயார்க் நகர சுகாதார துறை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.நியூயார்க் நகர சுகாதார துறை 18 வயது முதல் 44 வயது வரை நடத்திய ஆய்வில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு அதிகமாக காது பிரச்சனை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளது. தினமும் குறைந்த அளவு சத்தத்தில் பாட்டு கேட்பதோடு அடிக்கடி ஒய்வு கொடுக்க வேண்டும் என்கிறார் நிபுணர்கள்.

உலகின் முதல் மிதக்கும் அணு உலை


img1130713002_1_1
உலகின் முதன் முறையாக மிதக்கும் அணு உலையை ரஷ்யாவின் பிரபல நிறுவனம் தயாரிக்க உள்ளது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் வருகிற 2016ம் ஆண்டில் 6வது சர்வதேச கப்பல் கண்காட்சி நடைபெறுகிறது.
அதையொட்டி ரஷ்யாவில் மிகப் பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான பில்டிங் பிளாண்ட் அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு பிரமாண்டமான அணு உலை கப்பலை தயாரிக்கிறது.
இந்த கப்பலில் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் அக்கப்பல் நிறுத்தப்படும் நகரங்களில் மின்வசதியை அளிக்க முடியும்.
இதன் மூலம் இது உலகிலேயே முதலாவது மிதக்கும் அணு உலை என்ற சிறப்பை இக்கப்பல் பெறுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு ஹிலாரி வசூலிக்கும் தொகை ரூ.1.20 கோடி


Tamil-Daily-News_90671503544
அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பொது நிகழ்ச்சிகளில் பேசி கோடிகளில் பணத்தை அள்ளி வருகிறார். பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக முதல் முறை பொறுப்பு ஏற்றபோது ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் ஒபாமா 2வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டபோதும் ஹிலாரியே வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த பிப்ரவரியில் ஹிலாரி அந்த பொறுப்பிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஜான் கெர்ரி வெளியுறவு அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
தற்போது ஹிலாரி முக்கிய பேச்சாளராக மாறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் பேச ரூ.1.20 கோடி வரை கட்டணமாக வசூலித்து வருகிறார். கட்டணம் மட்டுமின்றி அவர் வந்து செல்ல தனியாக ஜெட் விமானம் ஏற்பாடு செய்யும் அளவுக்கு கூட செலவு அதிகரிக்கிறது.
ஹிலாரியின் கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டனும் இதேபோல பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றி சம்பாதித்து வருகிறார். அவர் இதன் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.102 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். பெரும்பாலும் அமெரிக்காவுக்கு வெளியே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார். நைஜீரியாவின் லாகோஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் பேசியபோது அவருக்கு ரூ.4.2 கோடி கொடுக்கப்பட்டது. ஹிலாரி பல ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ளார். வரும் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Friday, September 20, 2013

அம்மா எப்போ தூக்கிக் கொஞ்சுவாங்கனு 2 மாத குட்டிப்பாப்பாவுக்கு தெரியுமாம்…

27-baby-ds-600
இரண்டு மாத குழந்தைகளுக்கு அம்மா தன்னை எப்போது தூக்கிக் கொஞ்சுவார் என்பது நன்றாக தெரியும் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாசு ரெட்டி, தனது ஆய்வின் முடிவில், பிறந்து இரண்டு முதல் நான்கு மாதங்களே ஆன இளம் சிறார்களுக்கு தன்னைச் சுற்றி நடப்பவைகளாஇப் புரிந்து கொள்ள இயலும் எனத் தெரிவித்துள்ளார்.
அதுவும் அம்மா அருகில் வருகிறார் என்றால், தன்னைத் தூக்கி கொஞ்சுவதற்கோ அல்லது உணவு கொடுப்பதற்கோ தான் வருகிறார் என்பது அந்த குட்டிகளுக்கு நன்றாகவே புரியுமாம். எனவே, அதற்குத் தக்கவாறு உடலை விரைப்பாக்கி, தோள்பட்டையைத் தூக்கி அம்மா தூக்குவதற்கு வசதியாக ரெடியாகி விடுமாம் குழந்தை.

உடற்பருமன் நோய்தான்: அமெரிக்க டாக்டர்கள் அறிவிப்பு

3
 ”உடற்பருமன் ஒரு நோய்; இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் டாக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என, அமெரிக்க மருத்துவ சங்கம் (எ.எம்.எ.,) தெரிவித்துள்ளது.
“உடற்பருமன் நோய் அல்ல, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், தகுந்த உடற்பயிற்சி இல்லாததாலும் தான் இது ஏற்படுகிறது. எனவே, இதை, ஒரு குறைபாடாக கருதவேண்டுமே தவிர, நோயாக கருதக்கூடாது’ என, அமெரிக்காவில், பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, உடற்பருமனுக்கு சிகிச்சை பெற்றவர்கள், தங்களது மருத்துவ செலவினை திரும்பப்பெறாத நிலையில் இருந்தனர். மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும், உடற்பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு காப்பீட்டு தொகை, வழங்க முன்வரவில்லை. இந்நிலையில், “உடற்பருமன் என்பது ஒரு நோய்; நீரிழிவு நோய் டைப்-2, மற்றும் இதயக் கோளாறுகளுக்கு உடற்பருமனே முக்கிய காரணமாக கருதப்படுவதால், உடற்பருமனை நோயாக கருத வேண்டும்’ என, அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ சங்க உறுப்பினர், டாக்டர் பட்ரைஸ் ஹாரீஸ் கூறியதாவது: அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இந்த அறிவிப்பு மூலம், நீரிழிவு நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். காரணம், உடற்பருமனால்தான், இவை ஏற்படுகின்றன. உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவும் இயலும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடிக்கும் பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி

voknews
சிலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடித்து வருகிறார். ஒரு மாதமாக இது நடக்கிறது. என்ன சிகிச்சை அளித்தாலும் ரத்தம் நிற்காததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சிலி நாட்டின் லாஸ் லாகோஸ் மாகாணம் புராங்க் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் ஒலிவா, கார்பென்டர். இவரது மகள் யாரிட்ஷா ஒலிவா (20). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். யாரிட்ஷா ஒலிவா இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் அழுத போது கண்ணில் இருந்து ரத்தம் வந்தது. ஒரு மாதமாக தினமும் 3 முறை கண்களில் இருந்து கண்ணீருக்கு பதில் ரத்தம் வருகிறது. இதனால் ஒலிவாவுக்கு பயங்கர வலி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள கண் டாக்டரிடம் மகளை அழைத்து சென்றனர்.
ஒலிவாவுக்கு முதலில் கண்ணில் போடுவதற்காக சொட்டு மருந்து கொடுத்தனர். ஆனால், மருந்து போட்டும் ஒலிவாவுக்கு வலியும் குறையவில்லை, ரத்த கண்ணீர் வருவதும் நிற்கவில்லை. அதன்பிறகு பல கண் டாக்டர்களிடம் ஒலிவாவை பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால், டாக்டர்களால் ஒலிவாவின் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை. ஹெமோலாக்ரியா என்ற அரிய நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து யாரிட்ஷா கூறுகையில், எனக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை, ஏன் இப்படி நடக்கிறது, நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லைÕ என்று பீதியுடன் கூறுகிறார். மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். நல்ல மனம் படைத்தவர்கள் உதவி செய்யுங்கள் என்று ஜோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 2009ல் இதேபோல் ஹெமோலாக்ரியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் அழுத போதும் கண்ணில் இருந்து ரத்தம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1500 அடி ஆழ பள்ளத்தாக்கை கயிறு மூலம் கடந்து சாதனை

928804549g
அரிசோனா, ஜூன் 25- அமெரிக்காவில், 1,500 அடி ஆழம் உள்ள பள்ளத் தாக்கை கயிறு மூலம் கடந்து சாதனை படைத் துள்ளார், அந்நாட்டை சேர்ந்த வாலிபர்.
அமெரிக்காவின், அரி சோனா மாகாணத்தில் உள்ளது கிராண்ட் கேன் யான்’ பள்ளத்தாக்கு. 1,500 அடி ஆழ முடைய இந்த பள்ளத்தாக்கின் அருகில்தான், லிட்டில் கொலராடோ நதி பாய் கிறது. இந்நிலையில், இந்த பள்ளத்தாக்கின் ஒரு முனையிலிருந்து, மறு முனைக்கு, கயிறு மூலம் கடந்து சென்று, சாதனை படைத்துள்ளார், அந்நாட்டை சேர்ந்த வாலிபர், நிக் வாலண்டா, 34.
இது குறித்து நிக் வாலண்டா கூறுகையில், “எதிர்பார்த்ததை விட, காற்றின் வேகம் அதிக மாக இருந்தது. எனது தோள்பட்டையில் கடும் வலி இருந்த நிலையி லும், இந்த சாதனையை படைத்துள்ளேன்,” என்றார்.
இந்த மாபெரும் சாதனைக்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற வாலண்டா, கடை சியாக, புளோரிடாவில், கடும் பயிற்சி எடுத்து, 1,000 அடி தூரத்தை, கயிறு மூலம் கடந்தார்.
கடந்த ஆண்டு, உலகின் மிகப்பெரிய, நயாகரா’ நீர் வீழ்ச்சியை கயிறு மூலம் கடந்து சாதனை படைத்தார். தற்போது, 426 மீட்டர் நீளமுடைய இந்தப்பள்ளத்தாக்கை, இவர், 23 நிமிடத்தில் கயிற்றில் நடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பல்கலைகழக மாணவர்களுக்கு மனநல சோதனை

uni
பல்கலைக்கழகங்களுக்கு எதிர்காலங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் மனநலத்தை சோதனைக்கு உட்படுத்துவதற்கு உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
உயர் கல்வியமைச்சு மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதற்கான ஆலோசனைகளை நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை நோக்குகின்றபோது பல்கலைக்கழகங்களுக்குள் எதிர்காலங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் மனநிலையை சோதனைக்கு உட்படுத்துவது உகந்ததாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

mobile
கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் தொலைபேசி இலக்கங்களைக் கேட்டு தொல்லைபடுத்துவதாக பெண்கள் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்தும் சாரதிகள், நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக கல்முனை பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளில் தனியாகவும் கூட்டாகவும் பயணிக்கும் இளம் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் அவர்களது தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்துகின்றனர். அது மாத்திரமின்றி எப்படியோ தொலைபேசி இலக்கத்தினை அறிந்து கொள்ளும் சாரதிகள் அவர்களது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து அப் பெண்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் ஆசை வார்த்தைகளையும் கூறி தொல்லைபடுத்துவதாக சிலர் முறைப்பாடுகளையும் தெரிவித்துள்ளனர்.
எனவே, தனியாக பயணிக்கும் பெண்களிடம் தொலைபேசி இலக்கமோ அல்லது தொல்லையோ கொடுக்கின்ற நபர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடமோ அல்லது பொலிஸாரிடமோ தெரிவிக்குமாறு சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கல்முனை பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆழ் கடலுக்குள் உருவாகும் உள் அலைகள் (INTERNAL WAVES)

internalwavessatellite
(எஸ்.ஹலரத் அலி-ஜித்தா) 
அல்லாஹ் படைத்த இப்பூவுலகில் பெரும்பாகம் கடல் சூழ்ந்த உலகமாக சுமார் 70% நீர் நிரம்பிய கோளமாகவே உள்ளது.மனிதன் விண்ணில் ஏறி நிலவை பிடித்துவிட்டான்.
ஆனால் அவன் காலடியில் கிடக்கும் கடலின் ஆழத்திற்கு சென்று அதன் அற்புதங்களை அறிய முடியாத நிலையிலே அவன் அறிவு இன்றும் இருக்கின்றது. ஆழ் கடல் மர்மங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
ஆறாம் நூற்றாண்டில் இறக்கி அருளப்பட்ட அல்குர்ஆனில் ஒரு வசனத்தில் அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு உதாரணமாக ஆழ் கடலின்  இருளுக்கு ஒப்பிடுகிறான்.
“ ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” —அல் குர்ஆன். 24:40
இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நவீன அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்துகிறான். பொதுவாக கடலின் மேற்புறத்தில் காற்றின் தாக்கத்தால் அலைகள் உருவாகின்றன. இரவில் சந்திரனின் ஈர்ப்பின் காரணமாகவும் அலைகள் எழும்புகின்றன. இவ்வலைகள் எல்லாம் கடலின் மேற்பரப்பில் நிகழ்பவை.
ஆறாம் நுற்றாண்டில் இறக்கப்பட்ட அல்குர்ஆன் கூறுவது, ஆழ்கடல் அலைகளாலும்,அதற்கு மேல் மற்றொரு அலைகளாகவும் அதற்கும் மேல் மேகத்தாலும் மூடப்பட்டிருப்பதால் சூரிய ஒளி உட்புக முடியாமல் கடல் இருளாக இருக்கின்றது. ஆழ் கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பது பற்றிய அறிவு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் அறிந்து கொண்டான்.
1939   ம் ஆண்டு நார்வே நாட்டைச்   சேர்ந்த நோபெல் பரிசு பெற்ற கடல் ஆய்வாளர் நீல்சென், வடதுருவத்திற்கு செல்வதற்காக   கப்பலில் புறப்பட்டார்.   பனிப்பாறைகள் நிரம்பிய கடற்பகுதிக்கு   அவர் கப்பல் வந்தபோது மேலும் முன்னோக்கி செல்ல முடியாதவாறு கப்பல்   தடுக்கப்பட்டது.   அவர் கப்பலை நகர்த்த பல முயற்சிகள்   செய்தும் 20%   வேகத்தில் மட்டுமே நகர முடிந்தது.
காற்று ஏதுமின்றி அமைதியான   கடற்பரப்பில் கப்பல் நகராதது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.   இதன் காரணம் பின்புதான்   தெரிந்தது.   கடல் நீரானது பல அடுக்கு அடர்த்தி   நிலை,வெப்ப நிலை உப்புத்தன்மை மாறுபாடுகளைக் கொண்டது.   பனிப்பாறைகள்   ( Fiord )   உருகி நன்னீர் சேரும் மேற்பகுதி அடர்த்தி குறைவாகவும் உப்பு அதிகமுள்ள அடிப்புற   நீர் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும்.   அதிக அடர்த்தியுள்ள   கீழேயுள்ள நீரானது சுவர் போன்று கப்பலை தடுக்கிறது.   இதை (   Dead Water ) என்று   அழைக்கின்றனர்.
ஆழ்   கடலின் ஆழத்தில் உள்ள வெப்ப நிலை அடர்த்தி,   உப்புத்தன்மைக்கு ஏற்றவாறு   வெவ்வேறு அடர்த்தியுள்ள நீர்   ஒன்று சேரும் இடங்களில் ஆழத்தில் பெரும் அலைகள் உருவாகின்றன.   இவை சுமார்   100   மீட்டர் பிரமாண்ட  உயரமும்   ( 330   அடி) பல நூற்றுக்கணக்கான மைல்   நீளத்திலும் நீண்டு செல்லும்.கடற்பரப்பில் இவ்வலைகள் கண்ணுக்கு தெரியாது.
சூரிய ஒளி கடலில் பட்டு செங்குத்தாக   மேல் நோக்கி திரும்பிச் செல்வதால் ஆழ்கடல் உள் அலைகளின் பிரதி பலிப்பை (Reflected   Sunlight or Sunglint)   செயற்கை கோள் புகைப்படங்கள்   மூலமே காண முடியும்.   மேலேயுள்ள புகைப்படம் கடந்த ஜனவரி   18,   2013   ல்   (International Space Station)   சர்வதேச விண்வெளி   நிலையத்திலிருந்து  கரீபியன் கடற்பகுதியில் எடுக்கப்பட்டது.
கடலின் மேற்பகுதியில் காற்று, மற்றும் நீர் என இரு வெவ்வேறு அடர்த்தியுள்ள ஊடகங்களுக்கு மத்தியில் மேற்புற அலை தோன்றுகிறது. கடலின் ஆழத்தில் வெவ்வேறு அடர்த்தியுள்ள திரவங்களுக்கு மத்தியில் உள் அலைகள்  (Internal waves) உருவாகின்றன.
இதுபோன்ற   கடலடி அலைகள் உலகின் பல்வேறு கடற்பகுதிகளில் ஆழத்தில்  உருவாவதை செயற்கைக் கோள்   படங்கள் தெளிவாக நமக்கு காட்டுகின்றன.
அல்லாஹ் கூறும் இரண்டாவது அறிவியல்   உண்மை, கடல் நீரில் ஊடுருவும் சூரிய ஒளியானது ஆழம் செல்லச் செல்ல   தடுக்கப்பட்டுவிடும். (கடலுக்குள்ளிருந்து) “அவன்   கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.”  அல் குர்ஆன்.24:40.   சூரியனின் வெண்மை ஒளியானது பல அலைநீளம் உள்ள வண்ணங்களின் கலவையே.
சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,நீலம்,இன்டிகோ,வயலட்   அதிக அலை நீளத்திலிருந்து   குறைந்த அலை நீள வண்ணங்களை வரிசைப்படுத்தி VIBGYOR   என்று அழைப்பர்.   அதிக அலை நீளம் உள்ள   சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள் போன்ற நிறங்கள்,15,30,50   மீட்டர் ஆழத்திற்குமேல் ஊடுருவாது.   குறைந்த அலை நீளம் உள்ள   வயலட்,   பச்சை,   நீலம் போன்றவை இன்னும்   கூடுதலாக சுமார் 200   மீட்டர் ஆழம் வரைச் செல்லும்.

கடல் இருள் மயமாவதற்ககு காரணம் சூரிய ஒளியானது முதலில் மேகத்தால் தடுக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பி வரும் ஒளியை கடலின் மேற்புற அலைகள் தடுத்து விடுகின்றன. இன்னும் ஊடுருவிச் செல்லும் ஒளிகளை இருவித அடர்த்தியால் ஊருவாகும் உள் அலைகள் (Internal Gravity Waves) தடுத்து, கடலை இருளாக்கி விடுகின்றன. சூரிய ஒளியில்,
73%————1 செ.மீ. அல்லது ½” அங்குலம் ஆழமே ஒளி ஊடுருவும்.
44.5%———-1மீட்டர்  அல்லது 3.3 அடி ஆழமே செல்லும்.
22.5%———-10 மீட்டர் அல்லது 33 அடி ஆழமே செல்லும்.
0.53%———-100 மீட்டர் அல்லது 330 அடி ஆழமே செல்லும்.
   0.0062%——-200 மீட்டர் அல்லது 660 அடி ஆழம் வரையில் செல்லும்.
200-300 மீட்டர் ஆழத்திற்கு கீழ் முழுக் கடலும் இருள்மயமாகவே இருக்கும். இன்று ஆழ் கடலில் ஆக்சிஜன் வாயுவுடன் (SCUBA) மூழ்கிச் செல்பவர் தன் கையை நீட்டினாலும் ஒளி இல்லாததால் பார்க்க முடியாது.
ஒளி அலைக்கும் கடல் அலைக்கும் உள்ள தொடர்பு.
அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற மாஸாசூட்செட்ஸ் தொழில் நுட்ப கழகத்தின் ( MIT-Experimental and Nonlinear Dynamics Lab) ஆய்வகத்தில், பேராசிரியர் தாமஸ் பீகாக் தலைமையில் ஆழ் கடலில் எவ்வாறு உள் அலைகள் உருவாகின்றன, இதற்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பை ஆய்வு  செய்தனர்.
அதன் முடிவில், “ஆழ் கடலின் உள்ளே உருவாகும் அலைகளுக்கும், ஒளி ஊடுருவி செல்வதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும்,  ஒளியானது பல வகை அடர்த்தியுள்ள கண்ணாடி ஊடகத்தில் (Optical interferometers) செல்லும்போது ஒளியை தடுத்தும் சில அலை நீளங்களை கடத்தவும் செய்வதுபோல் கடலில் உருவாகும் உள் அலைகளும் (Internal Waves) வெவ்வேறு அடர்த்தியுள்ள கண்ணாடி ஊடகம் போல் செயல் படுகிறது. கடலடி அலைகளுக்கும் ஒளி ஊடுருவலுக்கும் உள்ள தொடர்பை தற்போதுதான் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளோம். இன்னும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.”என்று அறிவித்தார்.
More information: Paper: prl.aps.org/abstract/PRL/v104/i11/e118501 Provided byMassachusetts Institute of Technology
http://phys.org/news191657531.html
இன்று அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அறிவித்த கடல் உள் அலைக்கும், ஒளி அலைக்கும் இடையில் உள்ள தொடர்பு, இந்த உண்மையை அல்லாஹ் 6 ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தி விட்டான்.
“….ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது; அதற்க்கு மேல் மற்றொரு அலை; அதற்குமேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்போது) அவன் தன் கையை வெளியே  நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” -அல் குர்ஆன்.24:40. 
கடலடி நீரின் அடர்த்தி மாறுபாட்டால் உருவாகும் உள் அலைகள், அடர்த்தி மாறுபாடுள்ள கண்ணாடி (Optical  interferometer)  எவ்வாறு ஒளியை தடுத்து பிரித்து விடுவதுபோல்  உள்  அலைகள் (Internal Waves) செயல் படுகின்றன. அலையையும், ஒளியையும் இணைத்து ஒரே வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது ஓர் அறிவியல் அற்புதம்.
படைத்த இறைவனை மறுக்கும் நிராகரிப்பவர்களை, அல்லாஹ் ஆழ்கடல் இருளுக்கு உவமையாக கூறுகிறான். இதன் காரணம் என்ன என்று சிந்திக்கும்போது, உலகில் மிகச்சிலரே அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை மக்கள் மறுப்பவர்களாகவே உள்ளனர். எப்படி எனில்,
இப்பூமியில் நீர், நிலம் அனைத்திலும் உள்ள ஜீவராசிகளில் சுமார் 10% மட்டுமே சூரிய ஒளியை பெறுகின்றன. ஆழ் கடலில் வாழும் சுமார் 90% உயிரினங்கள் இருள் உலகிலே வசிக்கின்றன. ஆகவே நிராகரிக்கும் மக்களை அல்லாஹ் ஆழ் கடல் இருளுக்கு ஒப்பாக்குகின்றான். அல்லாஹ் அறிந்தவன்!
 “ நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும்,தெளிவுமுள்ள (திருக்குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
 அல்லாஹ் இதைக்கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகின்றான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.”   -அல் குர்ஆன்.5:15-17.

2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்

Nokia-Lumia-920-vs-Samsung-Galaxy-S-III
2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன, இக்காலப்பகுதியில் இலங்கையில்  0.57 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
சைபர் மீடியா ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனை நிறுவனமான பிரிமியர் IT எனும் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்த மட்டில்  இந்த காலப்பகுதியில் நொகியா (Nokia) கையடக்க தொலைபேசிகள் அதிகளவு விற்பனையாகின, கையடக்க தொலைபேசிகள்  சந்தையில் 31.9% சந்தை வாய்ப்பை தன்னகத்தே கொண்டிருந்தது.
சம்சுங் (Samsung) கையடக்க தொலைபேசிகள் 17.4% உடன் இரண்டாமிடத்திலும், மைக்குரோமெகஸ் கையடக்க தொலைபேசிகள் 10.4% உடன் மூன்றாமிடத்திலும் காணப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டில் சுமார் 22 கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இலங்கைக்கு கையடக்க தொலைபேசிகளை ஏற்றுமதி செய்திருந்ததாகவும், ஸ்மார்ட் போன்களின் பாவனை மற்றும், அண்ட்ரொயிட் தொழில்நுட்பத்தில் அமைந்த கையடக்கதொலைபேசிகளின் பாவனை அதிகரித்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

kmc

(ஹாசிப் யாஸீன்)
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில்நிர்மாணிக்கப்பட்டு வரும் கிறீன் பீல்ட் பூங்காவிற்கான வீதி அபிவிருத்தி வேலைகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்தார்.
கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கு முன்னால் செல்லும் குளத்தினை சுத்தப்படுத்தி அதனை மக்கள் பொழுது போக்கு இடமாக பயன்படுத்தக் கூடியவாறு இவ்வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது இவ்வீதி அபிவிருத்தி வேலைகளுக்கு தடையாகவிருந்த தனியார் கட்டிடங்கள் அகற்றப்பட்டதுடன் கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.
kalmunaihot3kalmunaihot2

அல்லாஹ் நாடினால் அப்துர் றஹ்மான் காத்தான்குடி மாநகர சபையின் முதலாவது மேயராக அமர்வார்!

hi-ar
அமையவுள்ள காத்தான்குடி மாநகர சபையில் அல்லாஹ் நாடினால் பொறியிலாளர் அப்துர் றஹ்மான் மாநகர மேயராக இருப்பார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அபிவிருத்தியும் சவால்களும் என்ற தலைப்பிலான பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா; பதவிகளை வழங்குபவனும் பதவிகளை பிடுங்கி எடுப்பவனும் அல்லாஹ்தான். எனக்கு இந்த பதவி அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் கிடைத்துள்ளது.
இதே போன்று பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அமையவுள்ள காத்தான்குடி மாநகர சபையில் மேயராக இருப்பார் அல்லாஹ் நாடினால் அது நடந்து விடும்.
கடந்த மாகாண சபை தேர்தலில் நான் பொறியியலாளர் அப்துர் றஹ்மானை வேட்டபாளராக நிறுத்தி அவரை மாகாண சபை உறுப்பினராக ஆக்குவதற்கு நாடினேன் ஆனால் அல்லாஹ் அதை விரும்பவில்லை.
பொறியியலாளர் சிப்லி பாறூக்கைத்தான் அல்லாஹ் விருமபியிருந்தான். பொறியியலாளர் சிப்லி ஒரு படித்தவர் மாத்திரமல்ல அவர் ஒரு தக்வாதாரியும் இறைவனுக்கு பயந்து கடமையாற்றுபவர்.
பொறியியலாளர் சிப்லி இந்த பதவிக்கு வருவதற்கு விரும்பவே இல்லை அல்லாஹ் விரும்பினான் அதனால் அவர் மாகாண சபை உறப்பினராக வந்து;ளளார்.
அல்லாஹ் நாடாமல் எதுவும் உலகத்தில் நடைபெறாது. காத்தான்குடியை மாநகர சபையாகவும், புதிய காத்தான்குடியை பிரதேச சபையாகவும் அமைக்க நடவடிக்கைகள் எடுத்துவருகின்றோம்.
அதில் அவ்வாறு காத்தான்குடி மாநகர சபையாக வருமாக இருந்தால் அல்லாஹ் நாடினால் அதன் மேயராக பொறியியலாளர் அப்துர் றஹ்மான் வரக் கூடும். அல்லாஹ் நாடினால் அதை யாரும் தடுக்க முடியாது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் அடிக்கடி எங்களை விவாதத்திற்கு அழைக்கின்றனர்.
விவாதிப்பது ஒரு முஸ்லிமின் பன்பல்ல பெருமானார் (ஸல்) அவர்கள் விவாதிப்பதை வெறுத்துள்ளார்கள். அதனால் உங்களுக்கு ஏதாவது சந்தேகமென்றால் அல்லது ஏதாவது திட்டத்தினை முன் வைக்க வேண்டுமென்றால் நாம் பேசுவோம். 3மாதங்களுக்கு ஒரு தடைவ பேசுவோம். பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அதை விடுத்து வீணான விமர்சனங்களை பொய்யான கட்டுக்கதைகளை முன் வைக்க வேண்டாம்.
அபிவிருத்திகளை தடை செய்யதீர்கள் அபிவிருத்திக்கான ஆலோசனைகளை முன்வையுங்கள்.
மீராபாலிகா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஒரு போக்கு வெள்ளத்தினால் பாதகிக்ப்படும் என்று கிண்டல் செய்தீர்கள். அல்லாஹ்வுடைய கிருபையினால் கடந்த வெள்ளத்தில் ஒரு பாதிப்பும் அதற்கு ஏற்படவில்லை.
இலங்கையின் இரண்டாவது சுரங்கப்பாதையான குருநாகலிலுள்ள சுரங்கப்பாதை கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. ஆனால் அல்லாஹ்வுடைய கிருபையினால் காத்தான்குடி சுரங்கப்பாதைக்கு எந்த பாதிப்பும் எற்படவில்லை.
எதற்கு எடுத்தாலும் விமர்சனம் ஊடகங்களில் அறிக்கை விடுகின்றீர்கள். இதைவிட்டு விட்டு ஆலோசனை கூறுங்கள் நல்ல திட்டங்களை முன் வையுங்கள்.
நீங்கள் என்மீது சுமத்தும் அத்தனை அபாண்டங்களுக்கும் அல்லாஹ்விடம் நாளை மஹ்ஸர் மைதானத்தில் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
நானும் மரணிப்பவன் நீங்களும் மரணிப்பவர்கள் அந்த இடத்தில் நிச்சயம் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்
நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன், வறுமை நிலையில் கல்வி கற்றவன், காத்தான்குடி சுக்ரியாஸ் பிடவைக்கடையில் நின்று கொண்டு அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு கல்வி கற்றவன்.
அப்படியான என்னை அல்லாஹ் இன்று இந்த நிலையில் வைத்துள்ளான். நாளை இன்னுமொரு நிலைக்கு ஆக்கலாம் அது இறைவனின் நாட்டம் எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

இளைஞர்களே முன்வாருங்கள் திருமணம் செய்ய: அழைக்கிறார் முஹம்மது அஷ்ரப்

ashraff-
(எஸ்.அஷ்ரப்கான்)
வர்த்தகமும் வளங்களும் விருத்திபெற்று விளங்கும் கல்முனை மாநகரில் தன்னிறைவு கண்ட செல்வச் சிமான்கள் பலர் இருந்திட்ட போதிலும், வயது வந்த ஏழைக்குமர்களின் தொகையும், அவர்களை கரை சேர்க்க முடியாதா?என்ற ஏக்கத்தில் வாழும் ஏழைப் பெற்றோரின் தொகையும் அதிகரித்து வரும் நிலையில் இப்பிரதேச வள்ளல்கள் மனம் வைக்காததால் பிரஸ்தாப மக்களது அழுகுரல்  மௌன கீதமாய் எங்கும் ஒலிக்கிறது. இந்த அழுகுரல் வெளியுலகத்திற்கு கொண்டுவரப்படாமல் இருப்பது கண்டு மனவேதனை அடைகின்றேன்.
இவ்வாறு சமூக சிந்தனையோடு துணிவாக குரல்கொடுத்து வெளியுலகிற்கு தன்னை ஒரு சமூக சேவகனாக வெளிக்காட்டவும், பெருமையற்ற இறை திருப்தியையும், மறுமைப் பயனையும் மட்டுமே பிரதியுபகாரமாகக் கொண்டு ஏழைப்பெண்களின் திருமண விடயத்தில் தன்னாலான உதவிகளைச் செய்து, செயலாற்ற முன்வந்திருக்கும் கல்முனையைச் சேர்ந்த ஒருவர்தான் முஹம்மது அஷ்ரப் என்ற விசேட தேவையுடைய இளைஞனாகும்.
இவர் பற்றிய சுய விபரத்தை நாம் தருவதுடன், எமது சமூகத்தின் ஏனைய இளைஞர்கள் இவரை முன்மாதிரியாகக் கொண்டு செயலாற்ற முன்வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
கல்முனையில் பிறந்த  முஹம்மது அஷ்ரப்.  இவர் விசேட தேவையுடையவராக இருக்கிறார். இவரது நற்குணங்களில் ஒன்று தொழில் செய்ய முடியாது விட்டாலும், யாரிடமும் யாசகம் கேட்காமல் கல்முனை வர்த்தக பிரதேசத்தில் போக்குவரத்து பயணிகளிடம் உணவுப்பண்டங்களை விற்பனை செய்து அதனுாடாக தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
இவர் திருமணம் முடித்தவர். தனது மனைவியிடம் எதனையும் எதிர்பார்க்காமல் தன் தாயினுடைய குடிசை வீட்டில் மனைவியை வைத்து இஸ்லாம் சொன்ன முன்மாதிரியான வாழ்க்கை வாழ்வது அனைவரையும் வியக்க வைக்கிறது.
ஏழைப் பெண்களின் திருமணம் செய்து வைப்பதற்காக  மணமகனாக இவர் நல்லுள்ளம் கொண்ட இளைஞர்களை தேடுகிறார்.
ashraff-
இவரை இது விடயமாக நாம் சிறிது நேர்கண்டோம். அவர் பின்வருமாறு கூறுகின்றார்;
ஏழைகளை இன்முகத்துடன் பொறுப்பேற்று திருமணம் செய்து கொள்வதில் எம் சமூகத்து இளைஞர்கள் அருகியே காணப்படுகின்றனர். ஏழையாகப் பிறந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழைப் பெண்களையே திருமணமும் முடித்து எமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த முஹம்மது நபியின் (ஸல்) அவர்களின் வழிமுறையை நாம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
கட்டிய சிறு வீட்டை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பெற்றோர்கள் திணறுவதையும், இதனால் வயதேறிச் செல்லும் முஸ்லிம் யுவதிகளின் கண்ணீரும் கவலையும் எமது பிரதேசத்தை ஆட்கொண்டிருப்பதால் நோய்கள், நிம்மதியின்மை, பொருளாதார நெருக்கடி என்ற பல்வேறு கோணங்களில் எமக்கு சோதனைகள் வந்த வருகின்றது.
இதனை மறந்த நிலையில் வெள்ளைப் பெண்களையும் வேன், கார், பங்களாவையும் தேடி அலையும் இளைஞர் பட்டாளம் நாளைய தீர்ப்பு நாளை நினைத்துப்பார்க்க வேண்டும். கழிப்பறை இருக்கும் இடம்தெரியாத அளவு பிரமாண்டமான இல்லத்தை இலவசமாகப் பெற்று சொகுசு வாழ்ககை நடாத்தும் சகோதரர்கள் கப்றின் நெருக்கம் நிறைந்த காரிருளில் என்ன செய்யப்போகின்றார்கள்.
ஏழைகளோடு பேசத்தயங்கும் உங்களுடன் நாளை கியாமத் நாளில் அல்லாஹ் பேசமாட்டான் என்பததைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த முயற்சியில் என்னுடன் இணைந்து சமூகத்திற்கு சேவையாற்ற என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு
முஹம்மது அஷ்ரப்
76-4, சின்னத்தம்பி வீதி
கல்முனை-03