Search This Blog

Pages

Friday, September 21, 2012

விலைபேகும் விலங்குகளாக மு.கா மாறிவிட்டது ; அநுரகுமார திஸாநாயக்க


Anura Kumara
பணத்திற்கு விற்பனை செய்யும் விலங்குகளாக அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் மாறியுள்ளனர் என  ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பணத்திற்கு விற்பனை செய்யும் விலங்குகளாக அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறிவிட்டது. இந்த நிலைமை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்.
பதவிகள், வரபிரசாதங்கள், காணி, பூமிகளுக்கு விலை போகும் மனிதர்களாக அரசியல்வாதிகள் மாறியுள்ளனர். இது நாட்டின் அரசியலில், மிகவும் கீழ்த்தரமான செயல்.
சகல இன மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒருவரை அரசாஙகத்தினால் நியமிக்க முடியாது போயுள்ளது.
சகல இன மக்களும் நிராகரிக்கும் வகையில் இம்முறை தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கம் சிங்கள இனவாத்தை தூண்டும் படியான பிரசாரங்களை முன்னெடுத்தது.
தேர்தல் முடிவுகள் எப்படி இருந்த போதிலும், தேர்தல் பிரசாரத்தின் போது, தூண்டப்பட்ட இனவாத தீ இன்னும் அதிகரித்து கொண்டு வருகிறது எனவும் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment