Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

விரிவுரையாளர் பகிஷ;கரிப்பில் இணைகிறது பேராதனை மருத்துவபீட ஆசிரியர் சங்கம்


lectures canceled
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மேற்கொள்ளும் பகிஷ்கரிப்புக்கு ஆதரவளிக்கும் முகமாக அடுத்த வாரத்திலிருந்து தாம் கல்விசார் பணியிலிருந்து வாபஸ்பெறப் போவதாக பேராதனை பல்கலைக்கழக, மருத்துவ பீட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சுமார் 75 விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் தமது பணியை நிறுத்திக்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கத் தவறியமை குறித்து தமது ஏமாற்றத்தை வெளிய்பபடுத்துவதற்காக பேராதனை மருத்துவ பீடம் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக பேராதனை மருத்துவபீட ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மூன்று மாத காலமாக பகிஷக்கரிப்பு மேற்கொண்டு வருகிறது. ஆனால் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என பேராதனை மருத்துவபீட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜயந்த ராஜரட்ன கூறினார்.

No comments:

Post a Comment